மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 June, 2020 2:23 PM IST
Image credited by: One india

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர் மட்டும் வேகமாக நிறம்பி வருகிறது.

அணை திறப்பு

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்றுத் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் தற்போதைய நீர்மட்டம் 39 அடியாகவும், உள்வரவாக வினாடிக்கு 411 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் இருந்து பாசனத்திற்காக 850 கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மதகுகளை திறந்து வைத்தார்.

மாவட்டத்தின் நீர் ஆதாரமாக இருந்து வரும் இந்த அணை தண்ணீரானது வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி வரை திறக்கப்படும். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அமராவதி, திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை தாமதமாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளன. இதில் 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் பருவமழை தாமதம் காரணமாக நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 92 கன அடியாகவும், வெளியேற்றம் 6கன அடியாகவும் உள்ளது.

இதேபோல 60அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையிலும் 24.81 அடி அளவிற்கே நீர்மட்டம் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அமராவதி அணையை பொறுத்தவரை திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும் திருப்பூர் மாவட்டத்தில் மழை பொழிவு இல்லை இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கேரளாவில் துவங்கியுள்ள பருவமழை விரைவில் தமிழகத்திலும் நல்ல மழை பொழிவை தரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க
தீவிரமாகும் பருவமழை - அணைகள் திறப்பு
WhatsApp-ல் இனி கேஸ் பதிவு செய்யலாம், பாரத் பெட்ரோலியம் அறிமுகம்!

English Summary: Water released from Kanyakumari Pechiparai Reservoir for irrigation
Published on: 09 June 2020, 02:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now