மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 April, 2023 5:46 PM IST
what are the main issues in Karaivetti bird sanctuary

கீழப்பாலூர் அருகே 453 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் அறிவித்தார். இதன் மூலம் மீண்டும் உயிர்த்தெழுமா கரைவெட்டி பறவைகள் சரணாலயம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த மாநில அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை உலகம் முழுவதும் இருந்து ஏராளமான புலம்பெயர் பறவைகளின் கூட்டம் மாநிலம் மற்றும் பிற இடங்களில் இருந்து பறவைகள் சரணாலயத்தை நாடி வரும். இது சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. ஆனால் காலப்போக்கில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளது, என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறை மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கரைவெட்டி பறவைகள் சரணாலயம் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளராக உள்ள தங்க சண்முகசுந்தரம் கூறுகையில்,"அடிப்படை வசதி, போக்குவரத்து வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. சரணாலயத்தில் உள்ள ஒரு விளக்கவுரை மையம் பழுதடைந்து, பராமரிப்பின்றி உள்ளது. சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். சரணாலயத்திற்கு வரும் புலம்பெயர் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு வெகுவாக குறைந்துள்ளது, என்றார்.

மேலும், சரணாலயத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை கவர வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்ட சண்முகசுந்தரம், அதற்கு முன், தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், குறிப்பாக இப்பகுதிக்கென தனி சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். படகு சவாரி வசதியையும் மீண்டும் கொண்டு வர வேண்டும்" என்றார்.

சேனாபதியை சேர்ந்த ஆர்வலர் பி.வேலுமணி கூறுகையில், "சரணாலயத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரம் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், பறவைகளை பார்க்க டெலஸ்கோப் வசதியும் இல்லை. பறவையியல் வல்லுநர்கள் உட்பட பலர் ஒவ்வொரு ஆண்டும் சரணாலயத்திற்கு வருகை தருகின்றனர். ஆனால் அங்கு தங்குவதற்கு போதுமான வசதிகள் இல்லை. எனவே அவர்களுக்கான தங்குமிட வசதிகள் செய்து தரப்பட வேண்டும்" என்று கூறிய அவர், சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக கண்காணிப்பு கோபுரத்தை பழுது பார்ப்பதற்கும், நவீன தொலைநோக்கிகளை அமைக்கவும் முயல வேண்டும் என்றார்.

மாவட்ட வன அலுவலர் ஆர்.குகணேஷை தொடர்பு கொண்டபோது, "ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், அடிப்படை வசதிகள் செய்து, சரணாலயத்திற்கு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த கண்காணிப்பு கோபுரம் மற்றும் விளக்கமளிக்கும் மையம் சீரமைக்கப்பட்டு, படகு வசதி மீண்டும் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

பத்திரப்பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு.. முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்வு

English Summary: what are the main issues in Karaivetti bird sanctuary
Published on: 17 April 2023, 05:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now