நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 May, 2022 8:42 PM IST
Wheat Suspension: Federal Government Decision!

தமிழ்நாடு உள்பட, 11 மாநிலங்களில் நியாய விலைக் கடைகளில், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், மாதந்தோறும், நாடு முழுவதிலும் உள்ள கிட்டத்தட்ட 81 கோடி மக்களுக்கு, 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கோதுமை (Wheat)

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம், வருகின்ற அக்டோபர் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு கோடை வெயிலின் தாக்கத்தால், கோதுமைப் பயிர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோதுமைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை கொள்முதல் செய்வதும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், கோதுமைக்கு பதிலாக, அரிசியை கூடுதலாக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில உணவுத் துறைக்கு, மதிய உணவு துறை செயலர் சுதன்சு பாண்டே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தில், தானியங்களை எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, கேரள மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சனை இல்லை என்றாலும் கூட, கோதுமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், உத்திர பிரதேசத்தில் சில சிக்கல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். நாட்டில், கோதுமை பயன்பாடு மற்றும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதன்சு பாண்டே அறிவித்துள்ளார். நடப்பாண்டு கொள்முதல் பருவத்தில், கடந்த 15 வருடங்களில், இந்த வருடம் தான் மிக குறைந்த அளவில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 55.50 லட்சம் டன் கோதுமையை அரசாங்கத்தால் சேமிக்க முடியும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

சென்னை ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய அரசு தகவல்!

கீரை விவசாயம: குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

English Summary: Wheat Suspension: Federal Government Decision!
Published on: 04 May 2022, 08:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now