மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 September, 2022 7:46 PM IST
Infected Cows

கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், நோய் தாக்குதலுக்கு உள்ளான கால்நடைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் விளக்கம் அளித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கால்நடைகளை தாக்கும் இலம்பி நோய் நச்சு உயிரி மூலம் பரவுகிறது. கொசு, ஈ, உண்ணிக்கடி, பாதிக்கப்பட்ட மாடுகள், கறவையாளர்கள், கன்றுக்குட்டி பாதிக்கப்பட்ட மாட்டின் பால் அருந்தும் போதும், நோய் உள்ள பகுதியில் இருந்து மாடுகளை வாங்கி வருவதன் மூலமும் பரவுகிறது.

கண்களில் நீர் வடிதல், மூக்கில் சளி, கடுமையான காய்ச்சல், உடல் முழுதும் கண்டு கண்டாக வீக்கம், உருண்டையான கட்டி உடைந்து சீர் வழிதல், நிணநீர் சுரப்பிகள் பெரியதாக காணப்படுவது. கால்கள் வீங்கியிருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை நோயின் அறிகுறிகள்.

இதனால் பால் உற்பத்தி குறையும், மாடு சினைபிடிப்பதில் பாதிப்பு ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாமல் உடல் எடை குறையும். மடி நோய் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்று இருந்தால் மாடுகளை பண்ணையிலிருந்து தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.

சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் தனியாக பிரித்து வழங்க வேண்டும். இந்நோய் பாதிக்கப்பட்ட பசு, எருமைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடித்து குணப்படுத்த முடியும்.

தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம், மஞ்சள் அளவாக கலந்து வாய் வழியாக கொடுத்து வந்தால் மாடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். வெற்றிலை 10, மிளகு 10 கிராம், உப்பு 10 கிராம், வெள்ளம் தேவையான அளவு அரைத்து கலந்து சிறிது சிறிதாக நாக்கில் தடவி கொடுப்பதன் மூலம் மாடுகள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க:

பணத்தை இருமடங்காக பெருக்க சூப்பர் திட்டம்

16 செல்வங்கள் என்று எதை சொல்கிறோம் தெரியுமா?

English Summary: Why quarantine infected cows?
Published on: 28 September 2022, 07:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now