அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 April, 2023 5:53 PM IST
128 metric tons of plastic seized in Madurai Corporation!

சமீபத்திய மாநகராட்சி பட்ஜெட்டின் போது, மேயர் இந்திராணி பொன்வசந்த் கூறியபோது, ஒற்றை பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காகவும், விதிகளை மீறியவர்களிடம் இருந்தும் 12,85,075 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 128 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது. மஞ்சப்பை இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறிய கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளதால், பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒற்றை பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக, விதிகளை மீறியவர்களிடம் இருந்து, 12,85,075 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என சமீபத்திய மாநகராட்சி பட்ஜெட்டின் போது, மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்துள்ளார். நகரில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான சோதனைகளை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், 'மீண்டும் மஞ்சப்பைத் திட்டம்' சுயஉதவிக்குழுக்கள் மூலம் நகரில் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து மஞ்சப்பை தயாரிப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: பாரம்பரிய துணி பை தயாரிப்பாளர்கள், விலைவாசி பிரச்னை மற்றும் செயற்கை பைகளால் வியாபாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். "நகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் துணி பைகளை தேர்வு செய்கின்றன. செயற்கை பைகளை தயாரிப்பதை தவிர வேறு வழியில்லை. பாரம்பரிய பைகளுக்கான மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும்," என்று கூறினார்.

மேலும், சுற்றுச்சூழல் ஆர்வலர் எம் ராஜா கூறுகையில், சில சோதனைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சிறிய அளவில் கைப்பற்றியதைத் தவிர, மாநகராட்சி போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

ரூ.30 கோடியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அறிவிப்பு!

தஞ்சாவூர்: 22,000 டன் சம்பா, தாளடி கொள்முதல் குறைவு!

English Summary: 128 metric tons of plastic seized in Madurai Corporation!
Published on: 04 April 2023, 05:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now