மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 July, 2021 9:44 AM IST
45 நாளில் 70 ஆயிரம் சதுர அடியில் கொரோனா மருத்துவமனை

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுர அடியில் கட்டிய புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு, ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சாதனைக்கான விருது வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரித்ததை கருத்தில்கொண்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கொரோனா முழுநேர சிகிச்சை மையமாக மாற்றியமைக்கபட்டது. இங்கு, அண்டை மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், போதிய படுக்கைகள் வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகள் சிரமமடைந்தனர்.

நோயாளிகளின் நலனுக்காக, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் ,பல்வேறு சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோரின் பங்களிப்புடன் ரூ.14.5 கோடி செலவில் கொரோனா சிகிச்சை மையம் கட்டும் பணி துவங்கியது. 69 ஆயிரம் 200 சதுரடியில், 3 தளங்களில் 401 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டிடம், நவீன தொழில் நுட்பத்துடன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி கட்டுமான பணி தொடங்கி, ஜூலை 1ஆம் தேதி 45 நாட்கள் கழித்து முடிக்கப்பட்டது.

அதிநவீன ஃபிரீ காஸ்ட் ஸ்லாப்ஸ் முறையில் மருத்துவமனை கட்டியதற்கும், அதிக எண்ணிக்கையிலான படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதாலும், பல்வேறு அமைப்புகளின் சார்பில் சாதனை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில்,உலக அளவில் Elite World Record, ஆசிய அளவில் Asian Book Of Record, தேசிய அளவில் Indian Record மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சாதனைக்கான சான்றிதழை வழங்கியது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள்,மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களும், சாதனை விருதுகளை வழங்கிய நிறுவனத்தினரும் பங்கேற்றனர். அப்போது, கொரானாவின் மூன்றாம் அலை வந்தால், இந்த மருத்துவமனை கொரானா சிகிச்சைக்காக முழுமையாக பயன்படுத்தப்படும், மேலும் பின்னர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க:

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தேர்தலில் தோற்றவர் மத்திய அமைச்சர் , வெற்றி பெற்றவர் மாநில அமைச்சர்- இதுதாங்க அரசியல்!

கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாவிட்டால் தளர்வுகள் வாபஸ்: மத்திய அரசு எச்சரிக்கை!

English Summary: 70,000 sq ft Corona Hospital in Erode-45 Day: Achievement !!
Published on: 08 July 2021, 09:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now