நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 June, 2023 2:22 PM IST
meendum manjappai mobile app- features and facility details

தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” செயலியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதன் மூலம் விற்பனையினை பெருக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் (TNPCB) இணைந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடையினை கடந்த 2019-இல் இருந்து செயல்படுத்தி வருகின்றது.

தடையினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான தொடர் சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அரங்கத்தில் நடைபெற்ற உலக சுகாதார தினவிழாவில் "மீண்டும் மஞ்சப்பை இணையதளம்" மற்றும் "மீண்டும் மஞ்சப்பை” செயலியானது அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலும் வடிவமைக்கப்பட்டு வெளியானது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர் விவரம்:

தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட மாவட்ட வாரியான அமலாக்க விவரங்கள், பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் மாவட்ட வாரியாக வகைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களின் விவரங்கள் மீண்டும் மஞ்சப்பை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலுமினியம், பாக்கு மட்டை, கரும்பு சக்கை, மூங்கில், வாழை நார், களிமண், தேங்காய் மட்டை, தென்னை நார், சோளமாவு, நெளி காகிதப் பொருட்கள், பருத்தியிலான பொருட்கள், காகிதம், சணல், தேவதாருமரப் பொருட்கள், வெட்டிவேர் மற்றும் துணி, மரத்தலானப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்துக்கொள்ள இயலும். இதன் மூலம் பொருட்களை வாங்க நினைப்பவர்கள் நேரடியாக செயலியின் மூலமே உற்பத்தியாளர்களை தொடர்பு கொள்ளவும் இயலும்.

மஞ்சப்பை செயலியின் முக்கிய அம்சங்கள்:

  • கூகுள் வரைபடத்தின் மூலம் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள பயன்படுகிறது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் பதிவு செய்ய பயன்படுகிறது.
  • தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர்க்கு எதிராக புகார்களை பதிவு செய்ய பயன்படுகிறது.
  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை தொடர்பான உங்கள் காணொளிகளை பதிவேற்ற உதவுகிறது.
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நடைபெற உள்ள நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை அறிய உதவுகிறது.

இந்த மஞ்சப்பை இணையதளம்/செயலி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிகினால் ஏற்படும் தீமைகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார விவரங்களை அறிந்த கொள்ள உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

pic courtesy : manjapai app

மேலும் காண்க:

PM kisan- இந்த 3 வழிமுறைகளில் e-KYC தகவல் அப்டேட் பண்ணுங்க!

English Summary: meendum manjappai mobile app- features and facility details
Published on: 24 June 2023, 02:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now