மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2023 2:09 PM IST
Old Pension: Expansion of Old Pension Scheme! Good news for pensioners!

Old Pension Scheme Latest Update: 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடையும் வகையில் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள், எஸ்ஓபி முதலானவைகளை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

மேலும் படிக்க: விவசாயத்தில் சந்தேகமா? இனி இந்த எண்ணிற்கு அழைங்க!!

சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடையும் என்ற நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் என்று தகவல்கள் பல தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் இப்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள் எனக் கூறப்படுகிறது. அதோடு, அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறுவார்கள் என அரசு தெரிவித்து இருக்கிறது.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?

இமாச்சலப் பிரதேச மாநில தலைமைச் செயலர் பிரபோத் சக்சேனாவின் அலுவலகம் வெளியிட்ட குறிப்பு ஒன்றில், இந்த முடிவினைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறையினை(SOP) அறிவிக்குமாறு நிதித் துறைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் என்பது அரசின் இந்த முடிவால் சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் எனக் காங்கிரஸ் கட்சி கூறி இருந்தது.

தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் நிலையில், காங்கிரஸ் ஆளும் அரசு, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை (Old Pension Scheme) மீட்டெடுக்க ஒப்புதல் அளித்தது.

பெண்களுக்கு மாதம் ₹1500 வழங்க முடிவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தினைத் தயாரிக்கவும், ஒரு மாதத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்கவும் அமைச்சரவையின் துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஜனவரி 1, 2004 முதல், அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வருவார்கள் எனக் கூறப்படுகிறது.

ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் பொறுப்பை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் அடிப்படையில், சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. இதன் காரணமாக, மாநில அளவில் நிதிச்சுமைக் கூடும். எதிர்காலத்திற்கான செலவினங்களை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும், என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க

TN மீன்பிடி கப்பல் மற்றும் எண்ணெய் டேங்கர் மோதல்!

தொடர்ந்து பரவும் “தமிழ்நாடு” எனும் கோலங்கள்! இதோ பாருங்க!!

English Summary: Old Pension: Expansion of Old Pension Scheme! Good news for pensioners!
Published on: 18 January 2023, 02:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now