1. மற்றவை

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?

Poonguzhali R
Poonguzhali R
7th Pay Commission: Will the salary of government employees be increased?

மத்திய அரசானது, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) வருகின்ற மார்ச் 2023 முதல் உயர்த்தப்படலாம் எனவும், இந்த உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2023-க்கு பின்பு அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையினைப் பிப்ரவரி 1 ஆம் தேதி வழங்க இருக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்க உள்ளது என்று தகவல்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் படிக்க: மீன் விலை கிடுகிடு உயர்வு! போட்டிப் போடும் பொதுமக்கள்!!

அரசு ஊழியர்களின் சம்பளம் பொருத்தும் காரணியை (Fitment Factor) அரசு திருத்தியமைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்பப்படுகிறது. தற்பொழுது பொதுவான பொருத்தக் காரணி 2.57 மடங்கு இருக்கிறது.

இதனை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த உயர்வால் ஊதியம் ரூ.18 ஆயிரம் எனும் நிலையிலிருந்து ரூ.26 ஆயிரம் எனும் நிலைக்கு உயரும். முன்பாக மத்திய அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மார்ச் 2023 முதல் உயர்த்தப்படலாம் எனவும், இந்த உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!

அரசாங்கம் ஃபிட்மென்ட் காரணியை 3 மடங்கு உயர்த்தும் நிலையில் அலவன்ஸ்கள் தவிர்த்து ஊழியர்களின் சம்பளம் 18,000 X 2.57 = ரூ 46,260 ஆக இருக்கும். அதே நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விட்டால், சம்பளம் 26000 X 3.68 = ரூ.95,680. 3 மடங்கு ஃபிட்மென்ட் காரணியினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், சம்பளம் 21000 X 3 = ரூ 63,000 ஆக இருக்கும்.

மேலும் படிக்க: சத்தான கீரை சாகுபடிக்கு 25 நாட்கள் போதும்! வழிமுறைகள் இதோ!

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டினுடைய 12 மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில், 01.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக 4 சதவீதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை 28 செப்டம்பர் 2022 அன்று ஒப்புதல் அளித்திருந்தது. 01.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோர் முறையே அதிக அளவு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் பெற தகுதியுடையவர்களாக மாறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியின் இந்த அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி தாக்கங்கள் ஆண்டுக்கு ரூ.6,591.36 கோடியாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க

லட்சக்கணக்கில் லாபம் தரும் செடி! இன்றே நடவு செய்யுங்க!!

Expo ONE 2023: வடகிழக்கு இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய ஆர்கானிக் கண்காட்சி!

English Summary: 7th Pay Commission: Will the salary of government employees be increased? When? Published on: 16 January 2023, 12:55 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.