மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 February, 2023 2:20 PM IST

அண்டை மாநிலமான ஆந்திராவில் பிறந்த கே.வி.ராம சுப்பா ரெட்டி, டெல்லியில் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு தனது கிராமத்துக்குத் திரும்பினார். பின்னர் அவர் தினை சமையல் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் இரண்டு தொழில்களைத் தொடங்கினார்.

கணக்காளராக பணிபுரிந்து வந்த அவர், தனது குடும்பத்துடன் தலைநகர் டெல்லியில் குடியேறினார். அவர் தனது கிராமத்திற்குத் திரும்பியதும் தனது விவசாய வேலைகளை தானே செய்ய முடிவு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது குடும்பத்தில் பெரும்பாலானோர் பாரம்பரிய விவசாய முறைகளில் கவனம் செலுத்தும் விவசாயிகள். சிலர் பழங்கள், காய்கறிகள் பயிரிடுகின்றனர், சிலர் தானிய உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அனுபவம் வாய்ந்த விவசாயிகளான எனது சகோதரர்களின் உதவியுடன் தோட்டம் அமைத்துள்ளேன்", என்று கூறினார்.

"சிறுவயதில் இருந்தே எனக்கு விவசாயத்தில் ஆர்வம் இருந்தது, நவீன உலகில் பாரம்பரிய விவசாய முறைகள் பயனளிக்காது என்பதை உணர்ந்தேன். விவசாயிகளின் பிரச்சனைகள் சுரண்டல் மற்றும் இடைத்தரகர்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவற்றால் அதிகரிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, தனது வசதியான நகர வாழ்க்கையை விட்டுவிட்டு, 2017-ல் முழு அளவிலான "நவீன விவசாயி" ஆக முடிவு செய்ததாக அவர் கூறினார்.

பருப்பு வகைகளை பயிரிட, சுப்பா ரெட்டி தனது தோட்டக்கலை பண்ணைக்கு அருகில் 20 ஏக்கர் நிலத்தை 2017ல் வாங்கினார்.

தினை மீது ஒரு மோகம் - நான் தினையை தேர்வு செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. என் அம்மா பல வகையான தினைகளைப் பயன்படுத்தி பல உணவுகளை செய்வார்கள். இரண்டாவதாக, தினைகள் பூச்சி தாக்குதலுக்கு மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டவை, எனவே நல்ல பயிர் விளைவிக்க ரசாயன பூச்சிக்கொல்லிகளோ உரங்களோ தேவையில்லை. "இந்தியாவின் தினை முத்தே" என்று புகழ் பெற்ற டாக்டர் காதர் வாலியின் எழுத்துக்களும் என்னை மிகவும் பாதித்தது என்றார் சுப்பா ரெட்டி.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் காதர் வாலி கடந்த 20 ஆண்டுகளாக அயராது உழைத்து ஐந்து ரக தினைகளுக்கு புத்துயிர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டில், ரெனாடு மற்றும் மிபுல்ஸ் என்ற இரண்டு பிராண்டுகளை ரெட்டி உருவாக்கினார், ஒன்று தானியங்கள் விற்பனைக்காகவும் மற்றொன்று ராகியில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விற்பனைக்காகவும். "கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இரண்டு பிராண்டுகளின் மொத்த வருவாய் சுமார் 1.7 கோடி ரூபாய். இந்த ஆண்டு அதை இரட்டிப்பாக்க விரும்புகிறேன்," என்று சுப்பா ரெட்டி கூறினார்.

அவர் மாநிலத்தில் சுமார் 20 தினை விவசாயிகளுடன் ஒப்பந்த விவசாயத்தைத் தொடங்கினார், மேலும் அவர்களின் விளைபொருட்களை அறுவடை மற்றும் 60 ஏக்கரில் விதைக்கும் நேரத்தில் நிலையான விலையில் வாங்கினார்.

இந்த தொழிலில் இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகளுக்கு சாதாரண விலையை விட குறைந்தது 30% கூடுதல் நியாயமான விலை கிடைக்கும் என்கிறார். ரெட்டி மாநிலத்தின் சிறு தானிய உற்பத்தியாளர்களால் "தினை மனிதன்" என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் படிக்க

காபி மற்றும் தேநீர் அடிமையா? குறைக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்

பட்ஜெட் 2023-24: அரசு மாற்று உரங்களை ஊக்குவிக்க PM-Pranam திட்டம் அறிமுகம்

English Summary: A common man who became a Millet Man after earning a bumper success in millet farming.
Published on: 02 February 2023, 02:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now