மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 December, 2020 7:26 AM IST
Credit : Dinamalar

ஒரு ஏக்கர் நிலத்தில், ஐந்து அடுக்கு சாகுபடி முறையில், 15 வகை பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார் சேலம் மாவட்ட விவசாயி குணசேகரன்.

இயற்கை விவசாயத்தில் ஆர்வம்:

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்துார் மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (Gunasekaran) வயது 54; மனைவி ஷியாமளா (Shiyamala) வயது 45. சுகாதாரத் துறை அலுவலராக (health department officer) பணிபுரிந்த குணசேகரன், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி ஷியாமளா எம்.எஸ்சி., சைக்காலஜி (MSc Psychology) படித்து, ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டார். தம்பதியின் பார்வை, இயற்கை விவசாயத்தின் மீது திரும்பியது. இதையடுத்து, 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை உரம் (Natural Compost) மற்றும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி, கருப்பு கவுனி அரிசி, ஆத்துார் கிச்சடி சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி (Cultivation) செய்துள்ளனர்.

ஐந்து அடுக்கு சாகுபடி முறை:

இயற்கை விவசாயத்தில் புதிய யுக்திகளைக் கையாள நினைத்து, ஐந்து அடுக்கு சாகுபடி முறையில் (Five layer cultivation method) ஒரு ஏக்கர் நிலத்தில், 15 வகை பயிர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளனர். இது குறித்து, குணசேகரன் கூறியதாவது: ஐந்து அடுக்கு சாகுபடி, ஆண்டு முழுதும் வருவாய் ஈட்டி தரும். ஒரே நிலத்தில் மரங்கள், செடிகள், கொடிகள் வளர்க்கும் முறை தான் இது. என் நிலத்தில் தென்னை, பப்பாளி, வாழை, முருங்கை உள்ளிட்ட மரங்கள், அதன் அருகில், சேனைக்கிழங்கு, தக்காளி, இஞ்சி, மஞ்சள், மிளகாய், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறி செடிகள், பீர்க்கங்காய், புடலை, பாவற்காய் உள்ளிட்ட கொடி வகைகள், உளுந்து, பச்சைப்பயறு மற்றும் பூ வகைகள் என, 15 வகை பயிர்கள் சாகுபடி செய்துள்ளேன்.

தினசரி மற்றும் ஆண்டு வருவாய்:

காய்கறிகள் மூலம் தினசரி மற்றும் வாரம் ஒருமுறையும், மரங்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை மற்றும் மூன்று முறையும் வருவாய் (Revenue) ஈட்ட முடிகிறது. ஐந்து அடுக்கு சாகுபடி முறையில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரே நிலத்தில், பலவகை செடிகள் நடவு (Planting) செய்வதால், அதன் வாசனையில் ஏற்படும் குழப்பம் காரணமாக, பூச்சிகள் தாக்கம் குறைவாக இருக்கும்.

இயற்கை முறையில் விவசாயம் செய்து நல்ல வருவாய் ஈட்டி வரும் ஓய்வு பெற்ற தம்பதிகள், வருங்கால இளந் தலைமுறையினருக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இயற்கை முறையில் நெல் உற்பத்தி! சாதனை படைத்த இயற்கை விவசாயி செல்வம்!

இயற்கை விவசாயமும், பாரம்பரிய அரிசி ரகங்களும்!! மனம்திறக்கும் கடலூர் விவசாயி சிவக்குமார்!

English Summary: Giving profit Five-layer cultivation Once! Awesome farming couple!
Published on: 07 December 2020, 07:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now