சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 22 April, 2022 11:17 AM IST
+2 student; Now Senior Lead in Zoho!

வாய்ப்புகள் கதவைத் தட்டும் போது அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். அதற்கு உதாரணமானவர்களில் ஒருவர் தான் சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் பரமசிவம்.

இவர் தனது பன்னிரண்டாம் வகுப்போடு கல்வியிலிருந்து விலகி ஜோஹோ பள்ளியில் சேர்ந்தார். ஆறு மாதத்தில் அதே நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் பெற்றார். இன்று அவருக்குக் கீழ் பல முன்னணி கல்வி நிறுவனங்களில், கல்லூரிகளில் படித்தவர்கள் ஜூனியர்களாக பணிபுரிந்து வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.

வறுமையின் காரணமாக, அவர்களால் மேற்படிப்புக்காக கல்லூரிக்கு செல்ல முடியாது என்பதை அந்த சிறு பார்த்திபனும், அவரது அண்ணனும் புரிந்து கொண்டனர். எனவே, மேலும் மேலும் பெற்றோருக்கு கல்விச் செலவு சுமையை ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை. தாங்களே ஏதேனும் பகுதிநேர வேலை பார்த்தோ அல்லது உதவித்தொகை பெற்றோ மேற்கொண்டு கல்வியைத் தொடர்வது என அவர்கள் முடிவு செய்தனர்.

அந்த நிலையில்தான், ’ஜோஹோ ஸ்கூல் ஸ்காலர்ஷிப் டெஸ்ட்’ என்ற அறிவிப்பைப் பார்த்து அதற்கு விண்ணப்பித்துள்ளார். ஏதாவது உதவி கிடைக்கும் என நினைத்து அதில் கலந்து கொள்ள எண்ணினர். அதில் தேர்ச்சியும் பெற்று பள்ளியில் சேர்ந்து அத்துனை மாணவர்களில் பார்த்திபன் டாப்பராக வந்துள்ளார்.

கையில் கம்பியூட்டர் இல்லாத நிலையிலும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். கணக்கு மீது கொண்ட ஆர்வமே அவரை ஜோஹோவில் சேர வைத்திருக்கிறது எனக் கூறியுள்ளார். அந்த ஆர்வம் தான் ஜோஹோ பள்ளியில் சேர்ந்த பின்னரும் தன்னை பலமாக வைக்க உதவியது என்றும் கூறியுள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே முடித்திருந்த பார்த்திபனை ஜோஹோ பள்ளியில் சேர அவரது குடும்பமும், சுற்றமும் அவ்வளவு சுலபமாக சம்மதிக்கவில்லை. பள்ளிக்குப் பிறகு கல்லூரி சேர்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்ற சமூகத்தின் நிலையை வாதமாக பார்த்திபன் முன்னிலையில் வைத்தனர். ஆனால் அவர்களது அவநம்பிக்கைகளை உடைத்து, தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக ஜோஹோ பள்ளியில் பெற்றிருக்கிறார்.


மேலும் படிக்க

TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!

அரசாங்க வேலைகளில் 26904 காலியிடங்கள்: 10வது 12வது தேர்ச்சி போதும்!

English Summary: +2 student; Now Senior Lead in Zoho: Parthiban
Published on: 22 April 2022, 11:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now