மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 August, 2021 12:20 PM IST
Visakhapatnam women and children who are role models for nature farming !!!

விசாகப்பட்டினத்தின் பெண்கள், குழந்தைகளுடன் நாட்டின் விவசாயத்தின் எதிர்காலத்தை மேம்படுத்தும்  இயற்கை விவசாயத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்கள். குழந்தை பருவத்திலிருந்தே புலமதி விவசாயத்தை விரும்பினார். திருமணத்திற்கு முன், பிஎட் படித்துக்கொண்டிருக்கும் போதே விவசாயம் செய்துகொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தது, அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தும் விவசாயம் செய்தார்.

ஒரு நபர் தனது லட்சியத்தில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் உறுதியாக இருந்தால் மேலும் அவரது இலக்கை நோக்கி அர்ப்பணிப்புடன் இருந்தால், எதையும் சாதிக்க முடியும். விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பெண் ஆசிரியர் இந்த வாக்கியத்தை உண்மையாகியுள்ளார். இந்தப் பெண் இன்று பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார். இது குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நாட்டின் விவசாயத்தின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் புலமதி, அவர் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார், அதே நேரத்தில் விவசாயமும் செய்கிறார். இன்று புலமதியின்  விவாதங்கள் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இவை பெண்களின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். புலமதி 27 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பண்ணையின் உரிமையாளர், அவர் தன்னை வளர்ப்பது கொள்வது மட்டுமல்லாமல், அவரது பண்ணையில் வேலை செய்யும் அனைத்து பெண்களையும் ஊக்குவிக்கிறார்.

புலமதி ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். தனது ஆசிரியர் துறையிலும் பெண்கள் சிறப்பாக பணியாற்ற முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார். புலமதி தற்போது 27 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார். அவரது வயல்களில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் பெண்களே. புலமதி அனைத்து பாடங்களையும் குழந்தைகளுக்கு கற்பிக்கிறார். குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்பிக்கும் போது, ​​தன்னுடைய பண்ணைக்கே கூட்டி வந்து நடைமுறை பாடமாகவே விளக்குகிறார்.

குழந்தை பருவத்திலிருந்தே விவசாயம் ஒரு பொழுதுபோக்கு

குழந்தை பருவத்திலிருந்தே புலமதி விவசாயத்தை விரும்பினார். திருமணத்திற்கு முன், பிஎட்  படித்துக்கொண்டிருக்கும்  போதும் கூட  விவசாயம் செய்தார். அதன் பிறகு அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தது, அப்போதும் விவசாயம் செய்கிறாள். புலமதி தனது பண்ணையில் அரிசி, இஞ்சி மற்றும் காய்கறிகளை வளர்க்கிறார். அது அவருக்கு நிர்பந்தம் அல்ல. இது அவருடைய பொழுதுபோக்கு.

பள்ளியில் ஒரே ஆசிரியர்

ஆந்திராவில் உள்ள மஜ்ஜிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் புலமதி. அவர் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு கற்பிக்கிறார் மற்றும் பள்ளியில் ஒரே ஆசிரியர் இவர் மட்டுமே. ஆரம்பத்தில் இருந்தே இயற்கை விவசாயம் செய்து வருகிறார். புலமதி ரசாயன விவசாயத்தால் மண்ணுக்கு ஏற்படும் சேதத்தை அறிந்திருப்பதாக கூறுகிறார். ரசாயன உரங்கள் மண்ணை சேதப்படுத்தும். மண்ணின் வளம் குறைகிறது. இதன் காரணமாக, ரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்துகிறார்.

ரசாயன உரங்களால் ஏற்படும் சேதம்

ரசாயன உரங்களால் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் ஆரோக்கியம் மோசமாக உள்ளது, ஆனால் கரிம உரத்துடன் பயிரிடப்படும் பயிர்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு மிகவும் சிறந்தது. நோய்கள் வேகமாக அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், கரிமப் பயிர்கள் நிறைய நிவாரணங்களைக் கொண்டு வரும் மற்றும் மக்கள் நோய்வாய்ப்படாமல் காப்பாற்ற முடியும்.

மேலும் படிக்க…

நிழல் வலை குடில் அமைத்து காய்கறி நாற்றுகளை உருவாக்கி அசத்துகிறார் விவசாயி பால்ராஜ்!

English Summary: Visakhapatnam women and children who are role models for nature farming !!!
Published on: 06 August 2021, 12:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now