Animal Husbandry

Friday, 09 September 2022 08:50 AM , by: R. Balakrishnan

57 thousand cows died

நாடு முழுதும் கால்நடைகளை தோல் கழலை நோய் தாக்கியதில், இதுவரையிலும் 57 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தோல் கழலை நோய் (Skin disease)

மத்திய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூறியதாவது:ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வைரஸ் தொற்றால் தோல் கழலை நோய் ஏற்படுகிறது. இது பாதித்த கால்நடைகளின் தோலில் தடிப்புகள் உருவாகி, மிகவும் அவதிப்பட்டு உயிரிழக்கின்றன. அசுத்தமான உணவு, நீர் ஆகியவற்றை அருந்துவதால் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்படுகிறது.

நாடு முழுதும் இதுவரை 57 ஆயிரம் மாடுகள் தோல் கழலை நோயால் உயிரிழந்துள்ளன. எனவே, ஆடு, மாடு ஆகியவற்றுக்கு கழலை நோய் தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

வாட்ஸ்அப்பில் புலிக்குட்டி விற்பனை: வனத்துறை அதிரடி நடவடிக்கை!

ஆம்புலன்ஸ்களுக்கு ஜி.பி.எஸ். வசதி: காவல் துறையின் புதிய திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)