மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 August, 2021 11:03 AM IST
Credit : Hindu Tamil

கோழி இறைச்சிக் கழிவுகளில் இருந்து பயோடீசலைத் தயாரித்த கேரளக் கால்நடை மருத்துவருக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தேவை (Fuel required)

பெட்ரோல், டீசல் ஆகிய வாகன எரிபொருட்கள் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதால், அவற்றுக்குரிய மாற்று எரிபொருட்கள் மீதான ஆராய்ச்சி அதிகரித்து வருகிறது.

ஆராய்ச்சிகள் (Research)

எத்தனால் பயன்பாடு, உயிரி எரிபொருள், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

இந்நிலையில் கேரளத்தின் வயநாடு பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரும், பேராசிரியருமான ஜான் ஆபிரகாம், கோழி இறைச்சிக் கழிவுகளில் இருந்து பயோடீசலைத் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளார்.

அதிகக் கொழுப்புச் சத்து (High in fat)

கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம் என்பதால், அதில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு பயோடீசலைத் தயாரித்துள்ளார் அவர். அவர் தயாரித்த பயோடீசல் மூலமாக இயங்கிய வாகனங்கள் ஒரு லிட்டருக்கு 38 கிலோமீட்டர் வரை சென்றன. அதே வேளையில் அதன் விலை தற்போதைய டீசல் விலையுடன் ஒப்பிடுகையில், வெறும் 40 சதவீதமாக மட்டுமே உள்ளது.

மாசுபாடு குறைவு (Pollution reduction)

டீசல் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைவிட பயோடீசல் மூலமாக ஏற்படும் மாசுபாடு பாதியளவுக் குறைந்து காணப்பட்டது. கோழி இறைச்சிக் கழிவுகள் மூலமாக பயோடீசல் தயாரிக்கும் நடைமுறைக்குக் காப்புரிமை கோரி ஜான் ஆபிரகாம் கடந்த 2014ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதற்கான காப்புரிமையை இந்தியக் காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ளது.

பட்டத்திற்காக (For the Degree)

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியாக இந்த பயோடீசல் நடைமுறையை ஆப்ரகாம் உருவாக்கினார்.

காப்புரிமை (Patent)

ஆனால் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் சார்பில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டதால், தற்போது காப்புரிமை பல்கலைக்கழகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

எந்த வகை விவசாயம் தண்ணீரைத் அதிகமாக எடுத்துக் கொள்கிறது?

English Summary: Biodiesel from chicken meat waste - patented veterinarian!
Published on: 03 August 2021, 07:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now