Animal Husbandry

Sunday, 03 January 2021 05:51 PM , by: KJ Staff

Credit : Dinakaran

உசிலம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை மைய வளாகத்தில் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் (Sustainable Agriculture Operational Plan) கீழ் 50 சதவீதம் முன்னேற்பு மானியத்துடன் (Subsidy) விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மானியம்:

தற்போது மக்களிடையே நாட்டுக்கோழி, ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்க்க ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசும் பொதுமக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மானிய (Subsidy) விலையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மதுரையில் உள்ள வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மானிய விலையில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வழங்கியுள்ளது.

கால்நடைகளை வழங்குதல்:

கால்நடை மருத்துவர்களின் (Veterinarians) பரிந்துரைப்படி மாடுகளை வாடிப்பட்டி சந்தையிலும், ஆடு, கோழிகளை உசிலம்பட்டி சந்தையிலும் விவசாயிகள் வாங்கினர். உதவி இயக்குநர்களான வேளாண் துறை ராமசாமி (Ramasamy), தோட்டக்கலைத்துறை தாமரைச்செல்வி (Thamaraiselvi), கால்நடை மருத்துவர்கள் மணிகண்டன், செல்வேந்திரன், ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் 98 பயனாளிகளுக்கு கால்நடைகளை (Livestock) வழங்கினர். மானிய விலையில் கால்நடைகளை வழங்கும் அரசின் திட்டம், பல இளைஞர்களை தொழில் செய்ய ஈர்க்கிறது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி! ஆய்வில் தகவல்!

ருசியான தரமான நாட்டுக்கோழி வளர்க்க வேண்டுமா? சில தகவல்கள் இங்கே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)