சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 24 August, 2022 7:45 AM IST

விவசாயிகளுக்கு மானிய விலையில் 4 ஆயிரம் பசுக்கள் வழங்கப்பட உள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றியதாவது:-

என் வீடு என் நிலம்

மானிய விலையில் விதைகள் மூலம் விவசாய நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும், நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடியில் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும்பொருட்டு என் வீடு என் நிலம் என்ற திட்டத்தின்கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள், விதைகள், நாற்றுகள், தோட்டக்கலை கருவிகள், நிழல்வலை ஆகியவை உள்ளடங்கிய தொகுப்பு 15 முதல் 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவுக்கு பாசிக் நிறுவனம் மூலம் இந்த ஆண்டில் சுமார் 5 ஆயிரம் தொகுப்புகள் வழங்கப்படும்.

விதைகள்

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்கவும், விவசாயிகள் காய்கறிகள் செய்வதை ஊக்குவிக்கவும் பன்முக வேளாண்மை வாயிலாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் காய்கறி விதைகளை 50 சதவீத மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆமை குஞ்சு பொரிப்பகம்

ஆமைகளைப் பாதுகாக்க புதுவை கடற்கரையோரத்தில் 5 கடல் ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்படும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் 2 வன அறிவியல் மையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் தொலைபேசி சேவையுடன் கூடிய நடமாடும் கால்நடை சிகிச்சை மையம் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆடு வளர்ப்பு

90 சதவீத மானியத்துடன் ஆடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பொதுப்பிரிவு விவசாய பயனாளிகளுக்கு 25 சதவீத மானியம் மற்றும் அட்டவணை பிரிவு விவசாய பயனாளிகளுக்கு 33 சதவீத மானியத்தில் 4 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும்.

கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை பராமரிப்பை வலுப்படுத்த 500 பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடைத்துறையின மூலம் பயிற்சி அளிக்கப்படும். இளங்கலை பட்டப்படிப்பு (விலங்கியல் அறிவியல்) மாணவர்கள் பயனடையும் வகையில் புதுவை பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் 20 இடங்களுடன் கூடிய புதிய முதுகலை பட்டப்படிப்பு (உயிரி அறிவியல்) ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்படும்.இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் - அரசு அறிவிப்பு!

தன் உயிரைக் கொடுத்துத் தாயைக் காப்பாற்றிய மகன்!

English Summary: Government decided to provide 4000 cows at subsidized prices to farmers!
Published on: 23 August 2022, 09:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now