Animal Husbandry

Monday, 02 November 2020 08:47 AM , by: Elavarse Sivakumar

பருவமழைக் காலம் என்பதால் கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் பூஞ்சான் ஏற்படுவதைத் தடுக்கத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

  • தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில், வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடும்.

  • மாநிலத்தின் சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

  • காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் பண்ணைகளில் தீவனம் வீணாகாமல் பாதுகாத்துக்கொள்ளும் வியூகங்களை கோழிப் பண்ணையாளர்கள் வகுக்க வேண்டும்.

  • பண்ணைகளின் உயர்மனைகள் பக்கவாட்டில் படுதாக்களை கட்டி தொங்கவிட வேண்டும்.

  • மேலும் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் ஸ்டெப்லோகாக்கஸ் கிருமிகள் ஈகோலை கிளாஸ்டிரியம் ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.

  • மழைக்காலமாக இருப்பதால், தீவன மூலப்பொருள்களில் பூஞ்சை நச்சுகளின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தீவனத்தில் தகுந்த நச்சுத் தடுப்பு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அதில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் படிக்க...

மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய அழைப்பு- விவசாயிகள் கவனத்திற்கு!

ரூ.25 ஆயிரம் முதலீட்டில் லட்சம் சம்பாதிக்க உதவும் பாக்கு மட்டைத் தட்டு தயாரிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)