நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 April, 2022 5:24 PM IST
Licensing is now Mandatory to keep Cows or Buffaloes at Home..

ராஜஸ்தான் அரசின் கூற்றுப்படி, நகர்ப்புறங்களில் வீட்டில் பசுக்கள் அல்லது எருமைகளை வளர்ப்பதற்கு, இப்போது வருடாந்திர உரிமம் மற்றும் 100 சதுர அடி பரப்பளவு தேவைப்படுகிறது. விலங்குகள் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டால், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

உரிமம் இல்லாமல், யாரும் தங்கள் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பசு மற்றும் கன்றுகளை வளர்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகள் கூறினர். கால்நடைகளுக்கு தனி இடமும் கட்டாயமாகும். புதிய விதிமுறைகள் மாநகராட்சி மற்றும் கவுன்சில்களின் அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது.

உரிமத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

புதிய விதிகளின் கீழ் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் கால்நடைகளுக்கான திட்டமிடப்பட்ட இடத்தின் விவரங்களையும், சுகாதாரச் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் அவற்றை வைத்திருப்பது எந்த இடையூறும் ஏற்படாது என்பது குறிப்பிடதக்கது.

ஆண்டு உரிமக் கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படும்.

கல்வி, மதம் மற்றும் பிற பொதுநல நிறுவனங்கள் மொத்த தொகையில் பாதியை செலுத்த வேண்டும்.

கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். கால்நடைகளுக்கு உரிமையாளரின் பெயர் மற்றும் எண்ணை கட்டாயம் குறிக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உரிமம் பெறாத பட்சத்தில் பொது இடங்களில் மாட்டுத் தீவனம் விற்பனை செய்வது தடை செய்யப்படும். அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கால்நடைகளை அடைக்க 170-200 சதுர அடி மற்றும் 200-250 சதுர அடி திறந்தவெளி இடம் தேவைப்படும் என்பது குறிப்பிடதக்கது. கால்நடை உரிமையாளர் பால் அல்லது கால்நடைகளின் பொருட்களை விற்பது போன்ற எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடுவது தடைசெய்யப்படும்.

சுகாதாரத்தை மீறும் பட்சத்தில், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு 10 நாட்களுக்கும், கால்நடை உரிமையாளர் நகராட்சி பகுதிக்கு வெளியே மாட்டு சாணத்தை அகற்றும் பொறுப்பை ஏற்க வேண்டி இருக்கும்.

கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும். எனவே கால்நடை வைத்திருப்போர், தங்கள் உரிமங்களை சரிபார்க்கவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

கால்நடை வளர்ப்பு திட்டம் என்றால் என்ன? யாருக்கு இந்த திட்டம்!

பசும்பால் மற்றும் எருமை பாலில் உள்ள முக்கிய வேறுபாடுகள்

English Summary: Latest News! Licensing is now Mandatory to keep Cows or Buffaloes at Home!
Published on: 18 April 2022, 05:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now