மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 December, 2020 1:08 PM IST

குறைந்த முதலீட்டில் ஒரு தொழிலை தொடங்கி அதன் எதிர்கால திட்டமிடல் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த தொழில் வெற்றியடையும். ஆம், இதில் கோழி வளர்ப்பு தொழில் மிகச் சிறந்த தொழிலாக பார்க்கப்படுகிறது. கோழி இறைச்சி தேவையும், அதன் முட்டை தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோழி வளர்ப்பு அல்லது கோழிப் பண்ணைத் தொழில் முக்கிய தொழிலாக மாறி வருகிறது.

எந்தவொரு தொழிலுக்கும் முதலீடு என்பது அவசியமான ஒன்று. தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அரசு என்றும் கைவிட்டதில்லை. நல்ல பல திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி வருகிறது. குறைந்த முதலீட்டில் நீங்களும் கோழிப் பண்ணை அமைக்க விரும்பினால் நபார்டு வங்கி (NABARD BANK) 25% மானியம் வழங்குகிறது. அதுவே வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கும், எஸ்சி-எஸ்டி பிரிவினர்களுக்கு 33.33% வரை மானியம் வழங்கப்படுகிறது.

தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல்

கோழி வளர்ப்பு அல்லது கோழிப் பண்ணை அமைக்க, முதலில் நீங்கள் ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இடம் கோழிகளை பாதிக்கும் வகையில் இருக்கக்க கூடாது. காற்று மாசுபாடு இல்லாத இடமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இது தவிர, தண்ணீர், சூரிய ஒளி மற்றும் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்திலிருந்து போக்குவரது வசதிகளும் இருக்க வேண்டும். இதற்கு பின்னர், நீங்கள் முதலீட்டிற்கான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு எஸ்பிஐ (SBI), பிஎன்பி (PNB), எச்டிஎப்சி வங்கி (HDFC BANK), ஐடிபிஐ வங்கி (IDBI BANK) உள்ளிட்ட பல பொது மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்க காத்திருக்கின்றன.

எஸ்.பி.ஐ (SBI) வங்கியில் கடன் பெறுவது எளிது

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, பிராய்லர் திட்டத்தின் கீழ் கோழிப் பண்ணை அமைக்க கடன் வழங்குகிறது. இதில், கோழிக்குஞ்சுகளை பராமரித்தல், தீவனம் வாங்குதல், கொட்டகை அமைத்தல் என அனைத்திற்கும் கடன் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நீங்கள் கோழிப் பண்ணை அமைக்கக்கூடிய நிலத்தை அடகு வைத்து வங்கிகள் உங்களுக்கு கடன்களை வழங்க முடியும். இந்த நிலத்தின் மதிப்பு குறைந்தது 50 சதவீத கடனுக்கு ஈடாக இருக்க வேண்டும்.

கடனை திருப்பிச் செலுவத்துவது எப்படி?

கோழிப் பண்ணைக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த எஸ்.பி.ஐ வங்கி ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கிறது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் முழு கடனையும் நீங்கள் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு கூடுதல் அவகாசமும் வழங்கப்படும். அதில் மீதமுள்ள தொகை ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் செலுத்தப்பட வேண்டும்.

வங்கிக் கடன் பெற தேவையான ஆவணங்கள்

எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்து கோழி கடன் பெற மூன்று முக்கிய ஆவணங்கள் தேவை.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் .

  • அடையாளச் சான்றுக்காக : வாக்காளர் அடையாள அட்டை / பான் அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம்

  • முகவரிச் சான்றுக்காக : வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவை தேவைப்படும்

75% வரை கடன் பெறலாம்

கோழிப்பண்ணையை பொறுத்தவரை, பயிற்சி அல்லது போதுமான அனுபவம் உள்ளவர்களுக்கு அல்லது கோழிப் பண்ணைக்கான கொட்டகை கட்ட போதுமான நிலம் உள்ளவர்களுக்கு வங்கி கடன் வழங்குகிறது. எஸ்.பி.ஐ தற்போது ஆண்டுக்கு 10.60 சதவீத விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. உங்களுடைய மொத்த முதலீட்டிலிருந்து 75 சதவீதம் வரை வங்கிகள் கடன் வழங்கும்.

மேலும் படிக்க...

லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு தொழில்களை தேர்ந்தெடுங்கள்.. அரசு மானியத்துடன் சிறப்பான எதிர்காலம்!

சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!

English Summary: Like to earn monthly? start poultry farming Business now, all banks ready to provide superb schemes and loans for it.
Published on: 02 December 2020, 05:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now