மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 December, 2020 10:28 AM IST
Credit : Dinakaran

கால்நடை வளர்ப்பு குறித்து வேளாண் துறையும், கால்நடை மருத்துவர்களும் பல்வேறு விழிப்புணர்வுகளை (Awareness) ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (O.S. Maniyan), பொதுமக்களுக்கு இலவசமாக வெள்ளாடுகளை (Goats) வழங்கி, கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விவசாயிகள் உபத்தொழிலாக கால்நடை வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதோடு மட்டும் நின்று விடாமல், கால்நடை முகாம்களை (Cattle camp) நடத்தி வருகிறது வேளாண் துறை.

கால்நடை முகாம்:

வாலாஜாபாத் அடுத்து கிதிரிப்பேட்டை, நெய்குப்பம், பூசிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தேசிய வேளாண் நிறுவனம் (National Institute of Agriculture) மற்றும் ஆலிகான் பிரக்சன் சிஸ்டம் நிறுவனம் (Alicon Fraction System Company) சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

கால்நடைகளுக்கு சிகிச்சை:

கால்நடை மருத்துவர் முகமது இசாத் (Mohammad Issad) தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை ஊசி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை (Treatment) அளித்தனர். இதில் பசு, ஆடு, கோழி என 400 கால்நடைகளுக்கு (Livestock's) சிகிச்சை அளிக்கப்பட்டது.

நோய் அறிகுறிகள் குறித்து விளக்கம்:

கிராம மக்கள், கால்நடைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும். கால்நடைகளுக்கு நோய் அறிகுறிகள் எப்படி காணப்படும் என்பது குறித்து மருத்துவ குழுவினர் விளக்கினர். வேளாண் நிறுவன இணை இயக்குனர் விஸ்வலிங்கம், தேசிய வேளாண் நிறுவன அலுவலர் ருத்ரகோட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கால்நடை முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு உள்ள பிரச்சனையை தெரிவித்து, சிகிச்சை பெற்றனர். இது போன்ற கால்நடை முகாம் அடிக்கடி நடந்தால் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

குடும்பத் தேவைக்காக ஆடு வளர்க்கும் அமைச்சர்! கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சி!

குறைந்த நேரத்தில் காயம் ஏதுமின்றி பால் கறக்க, நவீன பால் கறக்கும் இயந்திரம்!

English Summary: Livestock Camp on behalf of the Department of Agriculture! Good opportunity for livestock breeders
Published on: 30 December 2020, 10:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now