மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 November, 2020 8:51 AM IST
Credit : Future Poultry Solutions

ஆடு வளர்க்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் அனைவருக்கும் இனிப்பான செய்தி. உங்களுக்காகவே வந்துள்ளது திட்டம் (Goat Bank Scheme). ஆடுகளை எளிதாக நல்ல விலையில் விற்க, வாங்க இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அக்ரோடெக் நிறுவனம். அக்ரோடெக் (AcroTech) ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை (Self-sufficient economy) மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆடு வங்கி (Goat Bank) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆடுவங்கித் திட்டம்:

ஆடுவங்கித் திட்டம் தமிழகத்திலேயே முதல்முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை தொடங்க இந்நிறுவனம் முயன்று வருகிறது. இத்திட்டம் சந்தைகளுக்கு மாற்றான ஒரு உன்னதமான திட்டம் ஆகும். இதன் மூலம் பெண் விவசாயிகள் (Female farmers) நேரடியாக பயன் பெறுகிறார்கள்.

ஆடு வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த ஆடுகளை சந்தைப்படுத்த மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்த இந்நிறுவனம் சந்தைக்கு ஒரு மாற்று ஏற்பாடாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், ஆடு உற்பத்தியாளர்கள் ஆடுகளை நேரடியாக இம்மாதிரியான ஆடு வங்கிகளை அணுகி சிறந்த விலைக்கு விற்று கொள்ளவும், வாங்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இடைத்தரகர் (Intermediary) இன்றி உற்பத்தி செய்த பொருட்களுக்கு சரியான விலையில் கிடைப்பதாக ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

அக்ரோடெக் நிறுவனம்:

தமிழகத்திலேயே முன்மாதிரி திட்டமாக அக்ரோடெக் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தில் நீங்களும் பங்கு பெறுவதற்கும், லாபம் அடைவதற்கும் ஒரு அரிய வாய்ப்பை இந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது. இதற்கு மாவட்ட வாரியாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இதன் மூலம், குறைந்த முதலீட்டில் ஆட்டு வர்த்தகத்தில் நீங்களும் நிலையான மாத வருமானம் சம்பாதிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

தொடர்புக்கு:

அலைபேசி : 9884299871 / 7010144851 / 9566992545.

இணையதளம் : Info@agrotechfpc.org

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு! பிரதமரின் சூப்பர் திட்டம்!

விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!

English Summary: No worries anymore! Goat Bank Scheme has come to buy and sell goats!
Published on: 22 November 2020, 08:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now