Animal Husbandry

Friday, 01 July 2022 04:34 PM , by: Deiva Bindhiya

Poultry Breeding Plan 2022 to promote poultry farming

கோழி வளர்ப்பை ஊக்கிவிப்பதற்காக, கிராமப்புற பெண்களுக்கு இலவச நாட்டுக்கோழி திட்டம் 2022 ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு 50நாட்டு கோழி இனங்கள் விநியோகிக்கப்படும். TN இலவச நாட்டுக்கோழி திட்டம் ஜூன் 2018-இல் அறிவிக்கப்பட்டது. பின்னர் 77,000 கிராமப்புற பெண்களுக்கு நான்கு வார வயதுடைய சேவல்கள், கோழிகள் மற்றும் கூண்டுகளை வழங்குவதற்காக 10 ஜனவரி 2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு இலவச நாட்டுக்கோழி திட்டம் 2022 அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை தற்போது 25 கோடியாக உயர்த்தப்பட்டியிருப்பது குறிப்பிடதக்கது. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து, 5 பெண்களுக்கு நாட்டு கோழியை அப்போதைய முதல்வர் வழங்கினார்.

இலவசமாக நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் 2022 (Poultry Scheme 2022):

கொல்லைப்புறக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் விகையில் தமிழக அரசு 50 நாட்டுக் கோழி இனங்களை இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது. TN இலவச நாட்டுக்கோழி திட்டம் 2022 இன் படி, 77000 கிராமப்புற பெண்களுக்கு 4 வார வயதுடைய சேவல்கள், கோழிகள் மற்றும் கூண்டுகளை வழங்கப்படும். மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் மொத்த ஒதுக்கீடு தொகை ரூ.25 கோடியாகும்.

Try This: இன்று தில்லி தாபா ஸ்டைலில் முட்டை வறுவல்!

இலவச நாட்டுக் கோழித் திட்டத்தின் பலன்கள் (Benefits of the Free Country Poultry Program):

இலவச நாட்டுக் கோழி திட்டம் 2022ன் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் 4 வார வயதுடைய சேவல் மற்றும் கோழிகள் சம விகிதத்தில் கிடைக்கும் என்பதால், மக்கள் 16வதி வாரத்தில் 20 சேவல்களை விற்று லாபம் ஈட்டலாம். இந்தத் திட்டம் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். கொல்லைப்புற கோழி வளர்ப்பு பெண் தொழில்முனைவோரை அதிகமாக உருவாக்கும். மேலும் தனிநபர் வருமானம் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:

Stockholm Diamond League: தேசிய சாதனையை முறியடித்தார், நீரஜ் சோப்ரா

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)