Animal Husbandry

Friday, 26 March 2021 05:42 PM , by: KJ Staff

Credit : Green Biz

கால்நடைகளைப் பொருத்தவரை, நம் குழந்தைகள் போல பக்குவமாக கவனிக்க வேண்டும். நம்முடைய வாழ்வாதாரமாகத் திகழும் கால்நடைகளைக் (Livestock) காலம் முழுவதும் பராமரிப்பதுடன், நன்றிக்கடன் ஆற்றும் மனப்பாங்கு உள்ளவர்களாக இருப்பதும் முக்கியம். கால்நடைகளுக்கு ஏற்படும் வாயுப் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று இப்போது பார்க்கலாம்.

பசுமைக்குடில் வாயுக்கள்

பசுமைக்குடில் வாயுக்களை (Green house gas) வெளியிடுவதில் மாடுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. அவை வெளியேற்றும் வாயுக்களில், மீத்தேன் பெருமளவு இருப்பது தான் அதற்கு காரணம். மாடுகளின் தீவனத்தோடு (Fodder), சிறிதளவு கடல்பாசியை சேர்த்தால், மாடுகள் வெளியேற்றும் மீத்தேனின் அளவில், 82 சதவீதத்தை குறைக்கலாம் என, 'பிளோஸ் ஒன்' இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

நம் வளிமண்டலத்திற்குள் வெப்பத்தைத் தேக்கி வைத்து, பூமியை சூடேற்றுவதில், கார்ப்ன் - டை - ஆக்சைடை (CO2) விட, மீத்தேனுக்கு அதிக பங்கு உண்டு. மீத்தேனை வெளியேற்றுவதில் விவசாயத்திற்கு தான் முதலிடம், என்றாலும், மனிதர்கள் உருவாக்கிய பண்ணைகளில் வளரும் கால்நடைகள், 37 சதவீத பங்கு மீத்தேனை வெளியேற்றுகின்றன.

கடல்பாசி

இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு, தீவனத்தில் என்ன மாறுதல்களை செய்தால், அவை வெளியேற்றும் மீத்தேன் வாயுவை குறைக்கலாம் என, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் சோதனை செய்தனர். இறுதியில், தீவனத்தோடு, மிகச் சிறிய அளவு கடல்பாசியை (Seaweed) கலந்து கொடுத்தால், பெருமளவு மீத்தேன் வெளியேற்றத்தை தடுக்க முடியும் எனத் தெரியவந்தது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!

வேளாண்மை சார்ந்த தொழில்கள் பற்றி அறிவோம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)