Animal Husbandry

Wednesday, 20 April 2022 05:18 PM , by: Deiva Bindhiya

கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு உபத்தொழிலாகவும், லாபம் தரும் தொழிலாகவும் இருக்கிறது. இன்று பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர், மேலும் இந்திய அரசும் அதனை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான விவசாயத்திற்கு நாட்டு மாடுகளே சிறந்தது என வேளாண் அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இன்றும் நாட்டுமாடுகள் மீது ஈர்ப்புக் கொண்டவர்கள் ஆர்வமுடன் வளர்த்து வருகிறார்கள். புதிதாக மாடுகளை வாங்குபவர்கள் இடை தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க சில வழிமுறைகளை கவனிக்க வேண்டியுள்ளது. அது என்னென்ன என்பதை, இந்த பதிவில் பார்க்கலாம். 

கறவை மாடுகளை வாங்கும்போது, அதை வளர்க்க ஏற்ற இட வசதி, மேய்ச்சலுக்கான வசதி ஆகியவற்றை உறுதி செய்த பின்னர் வாங்க வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும். மேலும், நமது தட்பவெட்ப நிலை, சீதோஷ்ண நிலைக்கேற்ற மாடுகளைக் கேட்டறிந்து வாங்க வேண்டும். பெரும்பாலும் 3 வயதுக்கு உட்பட்ட மாடுகளையே வாங்க வேண்டும், இதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான, அதிக பால் உற்பத்தி கொடுக்கக் கூடிய மாடாக இருக்க வேண்டும்.

இதைத் தவிர மாடு வாங்குப்போது கவனிக்க வேண்டியது:

  • கறவை மாடுகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை சிறப்பான பசுவின் தோற்றமும், பெண்மை குணாதிசயங்கள் கொண்ட மாடாக இருக்க வேண்டும்.
  • சுறுசுறுப்பாகவும், சாந்தமான மனநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  • பசுவின் தோல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், தோல் மிருதுவாகவும், இழுத்து விட்டால் உடனடியாக பழைய நிலைக்கு செல்லும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.
  • கண்கள் பளிச்சென்று, துறுதுறு என இருத்தல் வேண்டும், மூக்கு அகலமானதாகவும், மூக்கின் நுனிப்பகுதி ஈரமானதாகவும் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான பசு என கருத்தில் கொள்ள முடியும்.
  • மாட்டின் பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும்.
    முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். கால்கள் வலுவானதும், வளைந்து இல்லாமலும் இருக்க வேண்டும்.
  • பால்மடியானது தொடைகளுக்கு நடுவில் பின்புறம் சிறிது உயரத்தில் இருந்து தொடங்கி வயிற்றின் முன் பாகம் வரை இருப்பது நல்ல பால் உற்பத்திக்கு அடையாளமாகும்.
  • பால்மடி தொடுவதற்கு மிருதுவாகவும், பால் கறந்தவுடன் மடி வற்றிப் போகவும் வேண்டும். பால் காம்புகள் மிகப் பெரியதாகவோ, சிறியதாகவோ இல்லாமல் ஒரே அளவு இடைவெளியுடன் இருக்க வேண்டும்.
  • எல்லா காம்புகளிலும் கறவை பால் வருகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.
  • மடியில் ஓடும் ரத்த நாளங்கள் வளைந்தும், புடைத்தும் காணப்பட வேண்டும். அப்படி இருந்தால் மாட்டுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருப்பதையும், பால் சுரக்கும் தன்மையையும் அறிய முடியும்.
  • கறவை மாடுகளை சந்தையில் சென்று வாங்காமல் கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்குவதே சிறப்பானதாகும்.
  • நமது மண்ணுக்கேற்ப அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கக் கூடிய கலப்பின மாடுகளை வாங்குவதே மிகச் சிறந்ததாகும்.

மேலும் படிக்க:

முககவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை

கோடை விடுமுறைக்கு தென்னிந்தியாவில் சிறப்பு சுற்றுலா தலங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)