Animal Husbandry

Monday, 12 September 2022 02:46 PM , by: Poonguzhali R

Vaccine to cure cattle skin tumor disease!

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உலகப் பால்வள உச்சி மாநாடு இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோயைக் கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சமீபக் காலமாக இந்நோய் காரணமாகப் பல மாநிலங்களில் கால்நடைகள் பலியாகியுள்ளது எனக் கூறியதோடு, இந்திய விஞ்ஞானிகள் தோல் கட்டி நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியை தயாரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தோல் கட்டி நோய் என்பது ஒரு தொற்று வைரஸ் நோயாகும். இது கால்நடைகளைப் பாதிக்கிறது. இந்த நோய் தாக்கம் ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் முடிச்சுகள் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். இந்த நோய் கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் குளவிகளின் நேரடி தொடர்புகள் ஆகியவற்றால் பரவுகின்றது.

மேலும், அசுத்தமான உணவு மற்றும் நீர் ஆகியவற்றின் மூலமாகவும் பரவுகின்றது. பல மாநிலங்கள் இந்த நோயுடன் போராடி வருகின்றன. இந்த நோய் பால் வளத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது எனக் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற பால்வள உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க

தொழில்நுட்பம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க உதவும்!

நாட்டின் சிறந்த உயிரியல் பூங்கா: வண்டலூர் பூங்கா தேர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)