Animal Husbandry

Friday, 12 February 2021 12:56 PM , by: Elavarse Sivakumar

Credit : Newsfirst.lk

தஞ்சாவூரில் கறவை பசுக்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி (One Day Training) நடைபெற உள்ளது.

வரும் 16ம் தேதி நடைபெறும் இப்பயிற்சியில் கால்நடை விவசாயிகள் தவறாமல் கலந்துகொண்டு, பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கால்நடை வளர்ப்பில், அவற்றில் இனப்பெருக்கம் சார்ந்த பிரச்னைகள் பிரதானமாகக் கருதப்படுகிறது. இதுதவிர, நோய் தடுப்பு நடவடிக்கைகள், தீவன மேலாண்மை என பல்வேறு விஷயங்கள் உள்ளன.

பால் மேலாண்மை (Milk management)

அந்த வகையில், கறவைப் பசுக்களில் பால் மேலாண்மை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த பசுக்களை வளர்க்கும்போது மேற்கொள்ளும் சவால்கள் குறித்தும், அதில் இருந்து மீண்டு வர உதவும் வழிமுறைள், யுக்திகள் குறித்து தஞ்சாவூரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத் தலைவர் கோபகத்சன் தெரிவித்திருப்பதாவது:

  • தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.

  • இந்த ஆராய்ச்சி மையத்தில், வரும் 16ம் தேதி கறவைப் பசுக்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பது குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது.

  • காலை 10 மணி முதல் மாலை வரை பயிற்சி நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க....

மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)