மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 July, 2021 7:54 AM IST

இந்தியாவில் வேலை பார்க்கக் கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கி இருப்பதாக, சி.ஐ.சி., எனும், கடன் தகவல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியான வாழ்க்கை (Quiet life)

எளிமையான வாழ்க்கை, எவரிடமும் கடன் வாங்காமை என பல்வேறு கொள்கைகளுடன் வாழ்பவர்கள் இன்றும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழத்தான் செய்கிறார்கள்.

அனைத்தும் EMIயில் (All in EMI)

ஆனால் இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஆடம்பர வாழ்க்கையே அத்தியாவசியமாகக் கருதப்படுவதால், அனைத்திற்கும் EMI கட்டவேண்டிய நிலையும் கட்டாயமாகிவிட்டது.

கடனுக்காகவே வேலை (Work for credit)

இந்நிலையில், இந்தியாவில் வேலைபார்ப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், தாங்கள் வாங்கியுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, கடனுக்காகவே வேலைக்கு செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சி.ஐ.சி.(CIC) என்னும், கடன் தகவல் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

20 கோடி பேர் கடனாளிகள் (20 crore people are debtors

நாட்டில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, மொத்தம், 40.07 கோடி பேர் ஆகும். இதில், சில்லரை கடன் சந்தையில் கிட்டத்தட்ட, 20 கோடி பேர் கடன் பெற்றவர்களாக இருக்கின்றனர். இவர்கள், குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கடன் அல்லது கிரெடிட் கார்டு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அதிக ஆர்வம் (More interested)

கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நிறுவன கடன்கள் விஷயத்தில், வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, அவை சில்லரை கடன் வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளன.

8 சதவீதம் (8 percent)

ஆனால், கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பின், சில்லரை கடன் பிரிவில் ஏற்பட்டு வரும் பின்னடைவு, சற்று கவலை அளிப்பதாக இருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி, கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில், 18 - 33 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் கடன் வழங்குவது, 8 சதவீதமாக மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது.

பெண்களின் பங்கு (The role of women)

மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட, புதிதாகக் கடன் வாங்கும் நபர்கள், தனிநபர் கடன் அல்லது நுகர்பொருள் கடன்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடன் வாங்குபவர்களில், பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

வீட்டுக்கடன் (Home loan)

வாகனக் கடனை பொறுத்தவரை, இவர்களது பங்களிப்பு, 15 சதவீதமாக இருக்கிறது. வீட்டுக் கடனை பொறுத்தவரை, 31 சதவீதமாகவும், தனிநபர்கடன், 22 சதவீதமாகவும், நுகர்பொருள் கடன், 25 சதவீதமாகவும் இருக்கிறது.

முதல் நிறுவனம் (First company)

மேலும், புதிதாகக் கடன் பெறுவோர், தங்களுக்கு முதன் முதலாக கடன் வழங்கிய நிறுவனத்திற்கே அதிக விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் மனதில், முதன் முதலாக கடன் வழங்கிய நிறுவனம் குறித்து, சாதகமான சிந்தனை இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரே‌ஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!

Online Ration Card: இப்போது நீங்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கார்டைப் பெறலாம், இங்கே எளிதான வழியை அறிந்து கொள்ளுங்கள்

4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி!

English Summary: 50% of those who go to work in the country are debtors!
Published on: 30 June 2021, 10:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now