மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 October, 2020 10:48 AM IST

காய்கறி விதை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதால், அதனைத் தவறாமல் பெற்றுப் பயனடையுமாறு நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து,நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • தமிழகத்தில் ரூ. 7 கோடியே 50 லட்சம் செலவில் தொழில்முனைவோா் மூலம் நாற்றங்கால் மற்றும் காய்கனி விதை உற்பத்திக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவியாக விதைச் சான்றிதழ் பெறுவதற்கும், விதைக் கொள்முதல் செய்வதற்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளவும், நிழல்வலை குடில், சிப்பம் கட்டும் அறை, நுண்ணீா் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்படும்.

  • குறைந்தபட்சம் 0.2 ஹெக்டோ் முதல் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை உறுதி செய்யப்பட்ட நீா்ப்பாசன வசதியுடன் கூடிய நிலம் கொண்ட விவசாயிகள் இந்த உதவிகளைப் பெறலாம்.

  • ஒரு ஹெக்டேரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகளை மேற்கொள்வதற்கு 30 சதவிகிதம் மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1200-ம், 9 க்கு 6 மீ அளவு கொண்ட ஒவ்வொரு சிப்பம் கட்டும் அறை கட்டுமானத்திற்கு 50 சதவித மானியத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

  • இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கும் விவசாயிகள் திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அல்லது அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா்களையோ தொடா்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது எப்படி?

அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்!

English Summary: Subsidy for Vegetable Seed Production- Call for District Farmers
Published on: 12 October 2020, 10:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now