மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 May, 2023 5:45 PM IST
Collector invites fish farmers to benefit from PMSSY scheme

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பயன்பெற மீனவ பயனாளி/மீனவ விவசாயிகளிக்கு காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தினை தொடர்பு கொண்டு கீழ் வரும் நலத்திட்டங்களில் தகுதியான மீனவ விவசாயிகள் பயன்பெறலாம். திட்டங்கள் விவரம் பின்வருமாறு-

  • குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் வளர்த்தல்) ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • மீன் விற்பனை அங்காடி (அலங்கார மீன் வளர்ப்பு/மீன்அருங்காட்சியகம் ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு அலகு (கடல் அல்லது நன்னீர்) ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் மீன் வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கான செலவினமான ரூ.14.00 இலட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • ரூ.73,721/- மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொது பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

எனவே இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600 115. (கைப்பேசி எண்.84891 89720) அலுவலகத்தை தொடர்பு கொண்டு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

pic courtesy:janprahar.com

மேலும் காண்க:

RTE சட்டம்- LKG, 1 ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை? கடைசி தேதி எப்போ?

English Summary: Collector invites fish farmers to benefit from PMSSY scheme
Published on: 15 May 2023, 05:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now