மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 November, 2020 5:13 PM IST

வளர்ந்து வரும் குழந்தைகள் பயனடைவதற்காக இந்த எல்‌ஐ‌சி நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம் ஆனது செயல்படுகிறது. இந்த பாலிசியானது 25 ஆண்டுகள் வரை பாதுகாப்பு வழங்குகிறது மேலும் முக்கியமான பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு முதிர்ச்சியின் போது ஒரு பெரிய தொகையை வழங்குகிறது.

இரு திட்டங்கள் புதுப்பிப்பு

காப்பீட்டு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ.) அறிவுறுத்தலின்படி, 17 புதிய திட்டங்களை ஏற்கனவே எல்.ஐ.சி. அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஜீவன் சங்கம் மற்றும் குழந்தைகளுக்கான புதிய மணிபேக் திட்டம் ஆகிய 2 திட்டங்கள் எல்.ஐ.சி யில் உள்ளது.

குழந்தைகளுக்கான திட்டம்

குழந்தைகளுக்கு என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள (LIC New children moneyback plan) புதிய பாலிசி திட்டத்துக்கு வயது வரம்பு 0 முதல் 12 வயது ஆகும் (வயதுக்கு தகுந்தாற் போல் பாலிசி தொகை வேறுபடும்). பாலிசி காலம் 25 வருடங்கள். குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் ஆகும். குழந்தை வளர்ந்து 18, 20 மற்றும் 22 வயதுகள் அடையும் போது காப்பீட்டு தொகையில் இருந்து 20 சதவீதம் வழங்கப்படும். முதிர்வு காலத்தில் காப்பீட்டு தொகையின் 40 சதவீதம் மற்றும் போனஸ் வழங்கப்படும்.

எல்‌ஐ‌சி நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டத்தின் சலுகைகள்

  • முதிர்வுச் சலுகைகள் : இந்த நிலையில் முதிர்வு காலத்திற்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட தொகையுடன் போனஸ் தொகையும் இணைந்து வழங்கப்படும்.

  • இறப்பு சலுகைகள் : பாலிசிதாரர் அகால மரணம் அடைய நேரிடுகிறார் எனில், இறப்பின் மீதான உறுதி செய்யப்பட்ட மொத்தத் தொகை மற்றும் அனைத்து போனசும் சேர்த்து வழங்கப்படும்.

  • தொடர்ந்து வாழ்தலுக்கான சலுகை : இந்த திட்டத்தில் பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு தான் பாலிசியிலிருந்து தொகையைப் பெற முடியும். இந்தத் தொகை ஆனது அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 20% ஆகும்.

ஒரே ப்ரீமியத்தில் ஓஹோன்னு வாழ்க்கை : எல்.ஐ.சி-யின் ஜீவன் அக்‌ஷய் திட்டம்!

இந்த பாலிசியில் கிடைக்கும் மற்ற சலுகைகள் 

  • நிறுவன ஆதாயங்கள்: எல்‌ஐ‌சி ஆனது பாலிசிதாரர்களுக்கு ஆதாயம் ஈட்டும் வாய்ப்பை வழங்குகிறது. மற்றும் அவர்களுக்கு போனசும் கூட கிடைக்கும்.

  • ஒப்படைவு தொகை: ஒப்படைவு தொகையை இந்த திட்டத்தை வாங்கும் தேதியன்றே முடிவு செய்ய வேண்டும்.

  • ஆனால் இது பிரீமியங்கள் மற்றும் அனைத்து கட்டணங்களையும் எந்த வித கால தாமதமும் இல்லாமல் தொடர்ந்து 3 ஆண்டுகள் செலுத்தி இருந்தால் மட்டுமே பொருந்தும். 

  • கழிவு மற்றும் தள்ளுபடி: எல்‌ஐ‌சி ஆனது அதிக பிரீமிய மதிப்புகளின் மீது கழிவு அல்லது தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் பாலிசிதாரர் பணத்தைச் சேமிக்க முடியும்.

தேவைப்படக்கூடிய அத்தியாவசியமான ஆவணங்கள்

  • தேவைப்படும் பாலிசிதாரர் திட்ட விண்ணப்பப் படிவம் அல்லது பரிந்துரை படிவத்தை நிறைவு செய்ய வேண்டும்.

  • திட்டத்தின் பெயரில் பாலிசிதாரரின் முழுமையான மருத்துவ அறிக்கை தேவைப்படுகிறது.

  • கே‌ஒய்‌சி (KYC) ஆவணங்களுடன் கூட தற்போதைய முகவரி ஆதாரமானது தேவைப்படுகிறது.

  • ஒரு சில நேரங்களில் சில மருத்துவ பரிசோதனைகள் ஆனது பாலிசிதாரருக்கு கட்டாயமானதாக இருக்கும். ஆனால் இது குழந்தையின் வயதையும் காப்பீட்டுத் தொகையையும் பொறுத்து இருக்கும்.


மேலும் படிக்க...

ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!

ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?

ரூ.5000 வேண்டுமா? ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்!

English Summary: LIC has best plan for your child future , all you want to know click here
Published on: 06 November 2020, 05:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now