நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 May, 2022 5:06 PM IST
Monthly Rs. 5,000 enough to get 1 lakh pension!

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தேசிய சேமிப்புத் திட்டத்தினைக் குறித்து இப்பதிவு அமைகிறது. தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டத்தினைக் குறித்த முழு விவரங்களை இப்பதிவு விளக்குகிறது

தற்காலத்தில், இளம் வயதில் ஓடி ஓடி உழைத்து வயதாகிற பிற்காலத்தில் சேமிப்பு இல்லாமல் தவிக்கின்ற நிலையினை நாம் ஆங்காங்கு பார்க்கத்தான் செய்கிறோம். அவ்வாறு நீங்களும் வயதான காலத்தில் எந்தவித பணப்பற்றாக் குறையும் இன்றி வாழ வேண்டுமா? அவ்வாறு வாழ வேண்டுமெனில் இன்றே தேசிய பென்சன் திட்டத்தில் இணையுங்கள்.

தேசிய சேமிப்புத் திட்டம் 

தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றாகும். இது முதலீட்டுத் திட்டமாகும். அதோடு, இந்த திட்டம் முதன் முதலில் 2004-ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு என்று மட்டும் தொடங்கப்பட்டது. ஆனால் பிறகாலத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அனைத்து மக்களுக்குமானதாக இத்திட்டம் மாற்றப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

யாரெல்லாம் பயன்பெறலாம்? (Who can benefit?)

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
18 முதல் 65 வயது வரை உள்ள நபராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள் (Highlights)

தேசிய பென்சன் திட்டத்தில் 8 முத்ல 10 சதவீத வட்டி லாபமாகக் கிடைக்கிறது.
வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது என்பது கூடுதல் நன்மை.

இது இரண்டு முறைகளில் காணப்படுகின்றது. அதாவது டயர் 01, டயர் 02 என இரண்டு பிரிவுகளில் மக்கள் பணத்தைச் செலுத்திக் கணக்கைத் தொடங்கலாம். டயர் 01 எனும் முதல் பிரிவில் குறைந்தது ரூ. 500 எனும் தொகையையும், டயர் 02 எனும் இரண்டாம் பிரிவில் குறைந்தது ரூ. 1000 எனும் தொகையும் செலுத்திக் கணக்குத் தொடங்கலாம்.

இந்த திட்டத்தில் நீங்கள் 25 வயது இருக்கும் போது மாதம் 5000 எனும் தொகையைக் கட்டி சேர்ந்து தொடர்ந்து பணத்தைச் சேமித்து வந்தால் உங்களின் கடைசி காலக்கட்டத்தில் ரூ.1 லட்சம் வரை பென்சன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இணையுங்கள். பணத்தை வீணாகச் செலவழிக்காமல் சேமித்து உங்களின் கடைசி காலங்களில் மிகுந்த பயனுள்ளதாக மாற்றுங்கள்.

மேலும் படிக்க

டிராக்டர் லோன் எங்கு பெறுவது? எப்படி பெறுவது?

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?

English Summary: Monthly Rs. 5,000 enough to get 1 lakh pension!
Published on: 19 May 2022, 05:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now