வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 September, 2024 2:13 PM IST
Pradhan Mantri Kisan Maandhan Yojana

செப்டம்பர் 12, 2019 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜ்னா (PM-KMY: Pradhan Mantri Kisan Maandhan Yojana) நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMFs- small marginal farmers) சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகிறது.

இந்த முதியோர் ஓய்வூதிய திட்டம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.3,000 நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர பங்களிப்பை வழங்க வேண்டும். அதற்கு இணையான நிதியை மத்திய அரசும் தனது பங்களிப்பாக செலுத்தும் என்பது இத்திட்டத்தின் கூடுதல் அம்சம். இந்நிலையில் திட்டம் தொடர்பான விவரம் பின்வருமாறு-

பங்களிப்பு விவரம்:

இத்திட்டத்தின் கீழ்,  குறு, சிறு விவசாயிகள் ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்தி பதிவு செய்யலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகள் தங்களது 60 வயது வரை, மாதத்திற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை தங்களது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மத்திய அரசும் விவசாயிகள் செலுத்தும் பணத்திற்கு இணையாக பங்களிக்கும்.

60 வயதை நிரம்பியதும், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறுவார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation) இந்த ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கிறது. மேலும் பயனாளிகள் பதிவு பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) மற்றும் மாநில அரசுகள் மூலம் எளிதாக்கப்படுகிறது.

யாரெல்லாம் இத்திட்டத்தில் இணைய முடியும்?

2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைக் கொண்ட மற்றும் 2019 ஆகஸ்ட் 1 நிலவரப்படி மாநில/யூனியன் பிரதேச நிலப் பதிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள். 2024, ஆகஸ்ட் 6, நிலவரப்படி, மொத்தம் 23.38 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் 3.4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்து முன்னணியில் உள்ளனர். பீகாரை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இணைந்துள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள 1.10 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

திட்டத்தில் இணைவது எப்படி?

திட்டத்தில் சேர, தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்ல வேண்டும் அல்லது மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகளால் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரியை (PM-Kisan) தொடர்பு கொள்ள வேண்டும். www.pmkmy.gov.in இல் உள்ள திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய போர்டல் மூலமாகவும் பதிவு செய்யலாம் . வழங்க வேண்டிய தகவல்கள் விவரம் பின்வருமாறு-

  • விவசாயி / மனைவியின் பெயர் மற்றும் பிறந்த தேதி
  • வங்கி கணக்கு எண்
  • IFSC/ MICR குறியீடு
  • மொபைல் எண்
  • ஆதார் எண்

Read also: தென்னை இலையில் V வெட்டு & வளர்ச்சி பாதிப்பு- காண்டாமிருக வண்டுக்கு தீர்வு என்ன?

குடும்ப ஓய்வூதியம் பெறும் போது சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது மனைவி சந்தாதாரர் பெற்ற தொகையில் 50%-க்கு சமமான குடும்ப ஓய்வூதியத்தினை (அதாவது மாதத்திற்கு ரூ.1500) பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுமைக் காலத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு சூழலை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட PM-KMY திட்டம் நடைமுறைக்கு வந்து தற்போது ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Read more:

உளிக்கலப்பை கொண்டு உழவு- ஏன் அவசியம் தெரியுமா?

உவர்நீர் இறால் வளர்க்க ரூ.4.80 இலட்சம் வரை மானியம்- விண்ணப்பங்கள் வரவேற்பு!

English Summary: PM KMY farmers monthly pension scheme Successfully completed 5 years
Published on: 11 September 2024, 02:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now