Central

Wednesday, 20 April 2022 03:14 PM , by: Dinesh Kumar

Get More Interest on PPF Account....

எஸ்.சி.எஸ்.எஸ் மற்றும் பி.எம்.வி.வி.ஒய் திட்டங்களைப் போலன்றி, இந்தப் பத்திரங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மாற்றியமைக்கப்படுகிறது.பி.பி.எஃப் போன்ற சேமிப்புத் திட்டம் என்பது முதுமையில் பலருக்கு உதவுவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.

உழைக்கும் மக்கள் தங்கள் கடைசி நாட்களில் பாதுகாப்பாக வாழ பி.பி.எஃப் கணக்கைத் திறப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்துவார்கள். இது பல வகையிலும் பலருக்கு பயன் தரும் திட்டமாக இருந்து வருகிறது.

பி.பி.எஃப் திட்டங்களை தொடங்குவது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால், முதிர்ச்சியடைந்த நிலையில் அதை எப்படித் திரும்பப் பெறுவது என்பதில் பல சந்தேகங்கள் இருக்கும். இதற்கான விரிவான பதிலை இந்த பதிவில் காணலாம்.

முதிர்வுக்குப் பிறகு அதிக வட்டியுடன் பி.பி.எஃப் கணக்கைப் பெறுவதற்கான வழிகள்:

குறைந்த வட்டி விகிதத்தில் இருந்தாலும், பி.பி.எஃப் திட்டங்களில் இருந்து அதிகப் பலன்களைப் பெற மூன்று வழிகள் உள்ளன. அதுவும் உங்களுக்கு நல்ல வருமானத்தை தருகிறது. இந்த வழிகளில் உங்கள் மூலதனத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை.

முதல் கட்டமாக, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் தனியாக முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை செலுத்தப்படும். தற்போது அதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4%.

இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டாலும், 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும் போது வட்டி விகிதம் பொருந்தக்கூடிய விகிதத்தில் நிர்ணயிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வைப்புகளைச் செய்யலாம். ஆனால் அனைத்து கணக்குகளிலும் மொத்த வைப்புத்தொகை ரூ.15 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நீங்கள் விரும்பினால், அதன் முதிர்வு காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

இரண்டாவதாக, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தைப் போலவே, நீங்களும் உங்கள் மனைவியும் பிரதான் மந்திரி வழி வந்தனா யோஜ்னாவில் (PMVVY) கூடுதலாக ரூ.15 லட்சத்தைச் சேமிக்கலாம். இது பிரீமியத்தைத் திரும்பப் பெறும் வருடாந்திரத் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அரசாங்கத்திற்காக நிர்வகிக்கிறது. தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி பெற முடியும். இதில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர கட்டண முறைகளும் அடங்கும்.

மூன்றாவதாக, மீதமுள்ள தொகையை இந்திய ரிசர்வ் வங்கியின் மிதக்கும் விகித சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் எஸ்.சி.எஸ்.எஸ் மற்றும் பி.எம்.வி.வி.ஒய் திட்டங்களைப் போலன்றி, இந்தப் பத்திரங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மாற்றியமைக்கப்படுகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழில் செலுத்த வேண்டிய வட்டியை விட இந்தப் பத்திரங்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி 0.35% அதிகம். தற்போது இந்த பத்திரங்களின் ஆண்டு வட்டி விகிதம் 7.15% ஆகும். இந்தப் பத்திரங்களுக்கான வட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் செலுத்தப்படும்.

இந்தப் பத்திரங்கள் ஏழு வருட காலத்திற்குரியவை. இந்த பத்திரங்களின் கீழ் அதிக தொகை எதுவுமின்றி முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க:

PPF: ரூ1.5 கோடி வருமானம் - வட்டியாக மட்டும் ரூ.1 கோடி கிடைக்கும் திட்டம்!

மூத்த குடிமக்களின் FDக்கள் மீது அதிக வட்டி விகிதம் வழங்கும் சிறிய வங்கிகள்! ஏமாற்றம் தரும் பெரிய வங்கிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)