மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 May, 2021 12:36 PM IST

வங்கிக் கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கும் வகையில் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறுபவர்களும் வங்கி, வரவு, சேமிப்பு, வைப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான நிதி சேவைகளையும் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

PMJDY கணக்கினை எந்த வங்கயில் வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இதற்கு எந்த கட்டாய இருப்பு தொகையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்தில் மூலம் இது வரை 42 கோடி பேர் வங்கிக் கணக்கை துவக்கியுள்ளனர்.

ஜன தன் யோஜனாவின் முக்கிய அம்சங்கள்

  • கணக்கு வைத்திருப்பவர்களுக்கு RuPay debit card வழங்கப்படுகிறது.

  • PMJDY கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு உள்ளது.

  • ஜன் தன் கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

  • கணக்கைத் திறக்க ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போதுமானது, வேறு ஆவணங்கள் தேவையில்லை

  • முதல் முறையாக கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஜன தன் கணக்குடன் ஆயுள் காப்பீடு ரூ. 30,000 இணைக்கப்பட்டுள்ளது, கணக்கு வைத்திருப்பவரின் மறைவுக்கு பின்பு கணக்கு வைத்திருப்பவர் பரிந்துரைத்த நபருக்கு இந்த பணம் கிடைக்கும்.

ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் பரிவர்த்தனை
கணக்கு வைத்திருப்பவர் விபத்தில் இறந்தால், கணக்கு வைத்திருப்பவரின் நாமினி ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 30,000 ஆயிரம் பெற முடியும். ஆனால் இதற்காக, கணக்கு வைத்திருப்பவர் விபத்து நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்கு முன்பு கணக்கு அல்லது ருபே அட்டை மூலம் பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும். எனவே, ஜன தன் கணக்கு வைத்திருப்பவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பரிவர்த்தனை செய்ய வேண்டியது அவசியமானது.

இன்னும் ஒரு சிறப்பு அம்சம்

ஜன் தன் கணக்கு ஒரு சிறப்பு வசதியை அளிக்கிறது, கணக்கில் பணம் இல்லையென்றாலும் கணக்கு வைத்திருப்பவர் ரூ. 10,000 வரை தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும், கணக்கைத் திறந்து 6 மாதங்களுக்குப் பிறகு இந்த வசதி கிடைக்கிறது.

மேலும் படிக்க...

ஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்குவது எப்படி?

English Summary: Pradhan Mantri Jan Dhan Yojana Gives many benefits includes Insurance Cover of Rs. 2 Lakh
Published on: 20 May 2021, 12:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now