பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 August, 2020 11:32 AM IST

வங்கிக்கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக்கணக்கை உருவாக்கும் வகையில் ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் (PM Jan Dhan account) தொடங்கப்பட்டது. இந்த ஜன் தன் கணக்கினை எந்த வங்கயில் வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இதற்கு எந்த கட்டாய இருப்பு தொகையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் இதுவரை 53 சதவீதம் வங்கிக்கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஜன் தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு, கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மாதம் அவர்களின் வங்கி கணக்கில் 500ரூபாய் மத்திய அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 20 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜன் தன் கணக்கு தொடர்காக விவரங்களை அறிந்துக்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கு இலவச உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜன் தன் வங்கி கணக்கு தொடங்குவது குறித்து விவரங்களை அறிந்துக்கொள்ள முடியும். ஜன் தன் வங்கி விவரங்களை தெரிந்துக்கொள்ள தமிழ்நாடு: 18004254415, பண்டிச்சேரி: 18004250016 என்ற இலவச எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். வங்கிக்கணக்கில் பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்.

Credit by : Kadhir News

ஜன் தன் வங்கி கணக்கு இருப்பு அறிவது எப்படி?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) பயனர்கள் 18004253800 அல்லது 1800112211 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இந்த எண்ணிற்கு அழைத்து தெரிந்துக்கொள்ளுங்கள் அல்லது மத்திய அரசின் பொது நிதி மேலாண்மை அமைப்பின் (Public Financial management system )இணையதளத்தில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு வங்கிக் கணக்கின் இருப்பு தொகையை ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும். இது குறித்து அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

வங்கிக்கணக்கைத் தொடங்குவது எப்படி?

நீங்கள் ஜன் தன் வங்கி கணக்கைத் தொடங்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்

  • பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா விண்ணப்பப் படிவத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தோ அல்லது ஏதாவதொரு வங்கி இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரிச் சான்று ஆகியவற்றை இணைத்து அதனோடு KYC விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

  • நீங்கள் ஜன் தன் கணக்கு திறக்க நினைக்கும் வங்கி கிளைக்கு இந்த ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தையும் எடுத்துச் செல்லவும்.

  • உங்கள் ஆவணங்களை முறையாகச் சரிபார்த்த பின்னர், உங்கள் வங்கிக் கணக்கு திறக்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்

  1. ஓட்டுநர் உரிமம்

  2. ஆதார் அட்டை

  3. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை

    கடவுச்சீட்டு (Passport)

  4. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)

  5. தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை (மாநில அரசு அலுவலரால் கையொப்பம் இடப்பட்டது)

  6. அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம்.

English Summary: State wide free helpline number announced to let know about Jan dhan yojana scheme
Published on: 22 July 2020, 05:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now