மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 November, 2020 10:21 AM IST

பால் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறுதொழில் நிறுவனங்களுக்கான திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் (Aatma Nirbhar Bharat Abhiyan)ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்த பிரதமரின் உணவு பதப்படுத்தும்
சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2020- 21 முதல் 2024- 20ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீத மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதிப் பங்களிப்புடன் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

இந்தத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில் ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்தவும், புதிய நிறுவனங்களைத் தொடங்கவும், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், வர்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் ஆகிய வற்றுக்கு நிதி உதவி செய்யப்படுகிறது.

அத்துடன், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நிதியுதவி செய்யப்படும். இதன்படி ஒரு மாவட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மானியம் (Subsidy)

இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம்.
வர்த்தக முத்திரை, சந்தைப் படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

இத்திட்டம் குறித்து வேலூரில் மாவட்ட அளவிலான குழு ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் அமைக்கப்பட்டு நடைபெற்ற முதல் கூட்டத்தில், திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும், பயனாளிகளைத் தேர்வு செய்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பால், இதர உணவுப் பொருள் உற்பத்தி சார்ந்த சிறு தொழில் களுக்கும் இத்திட்டம் மூலம் பயன்பெற வழிவகை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் பால் பதப்படுத்தும் தொழிலுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். இந்தத்திட்டத்தின்படி பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேளாண் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!

அங்கக வேளாண்மையில் பயிர்களின் காதலன் எது தெரியுமா?

உடல் சூடு பிரச்னை இவைகளுக்கும் உண்டு-தடுக்கும் வழிகள் !

English Summary: Subsidy up to Rs 10 lakh for milk processing industry - Central Government scheme!
Published on: 11 November 2020, 10:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now