Central

Wednesday, 14 September 2022 02:26 PM , by: Poonguzhali R

Tractor at 50% subsidy! Apply today!

விவசாயிகளுக்கு வசதியாக இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் மாநில அரசு வழங்கக் கூடிய ஒரு சிறப்பான திட்டத்தைக் குறித்துதான் இப்பதிவு விளக்குகிறது. அதாவது, 50% மானியத்தில் டிராக்டர் எவ்வாறு பெறுவது? அவ்வாறு பெற என்ன திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது? எவ்வாறு அந்த திட்டத்திற்குப் பதிவு செய்வது என்பவை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்தியா ஒரு விவசாய நாடு மற்றும் அதன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாய சகோதரர்கள் தங்கள் வயல், பயிர்களுக்கு மட்டும் செலவு செய்யாமல் விவசாய உபகரணங்களுக்கும் செலவழிக்க வேண்டியுள்ளது, விவசாயிகள் பயன்படுத்தும் முக்கிய விவசாய உபகரணங்களில் டிராக்டரும் ஒன்று ஆகும்.

மேலும் படிக்க: தோட்டக்கலையின் இயந்திரமயமாக்கல் திட்டம்: டிரேக்டர் மற்றும் பவர் டில்லருக்கு மானியம்

டிராக்டர் விவசாயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, அதே நேரத்தில் இது மிகவும் விலையுயர்ந்த விவசாய இயந்திரமாகும். விவசாயிகள் டிராக்டரை வாங்குவதற்கு மிகப் பெரிய தொகையை செலவிடுகிறார்கள். இந்தப் பிரச்னையைச் சமாளிக்க புதிய டிராக்டர் வாங்குவதற்கு 50% வரை மானியம் வழங்குகிறது. இந்த நிலையைப் போக்கவும், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் அமையவும் இந்திய அரசால் வழங்கப்படும் மானியத் திட்டம்தான் பிரதான் மந்திரி டிராக்டர் யோஜனா திட்டம்.

தேவையான ஆவணங்கள்

மேலும் படிக்க: PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!

டிராக்டர் பெறத் தகுதி

  • விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
  • கடந்த 7 ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் விவசாயிகள் எந்த டிராக்டரும் வாங்கியிருக்கக் கூடாது.
  • விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருத்தல் வேண்டும்.
  • ஒரு டிராக்டருக்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும்.
  • குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே டிராக்டர் மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும் படிக்க: இனி முன்பதிவு டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம்: புதிய மாற்றம்!

திட்டத்தின் சிறப்பம்பசம்

  • இந்த திட்டம் இந்திய மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
  • விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவதற்கு அரசிடம் இருந்து 50% வரை மானியம் பெறலாம்.
  • இதன் மூலம் விவசாயிகள் குறைந்த விலையில் நவீன விவசாய இயந்திரங்களை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
  • விவசாயிகள் எந்த நிறுவனத்தின் டிராக்டரையும் பாதி விலைக்கு வாங்கலாம்.
    மீதமுள்ள பணத்தை அரசு மானியமாக வழங்குகிறது.
  • பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
  • எனவே விவசாயிகள் வங்கிக் கணக்குடன் இந்த வங்கிக் கணக்கில் ஆதார் அட்டையை இணைப்பது அவசியம்.
  • மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு டிராக்டர்களுக்கு 20 முதல் 50% வரை மானியம் வழங்குகின்றன.
  • பிரதம மந்திரி கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ், புதிய டிராக்டர் வாங்கும் போது, ​​20 முதல் 50 சதவீதம் வரை மானியம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது.

விண்ணப்பிக்கும் செயல்முறை என்று பார்க்கும்போது, விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையங்களின் உதவியுடன் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது ஒவ்வொரு மாநிலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டிற்கும் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

மின் கட்டண உயர்வை நிறுத்துங்க: பின்னலாடை தொழிலார்கள் கோரிக்கை!

UPSC: IAS படிக்க இலவச வகுப்புகள்! இன்றே சேருங்க!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)