மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 August, 2020 10:10 AM IST
Credit: Today Dunia

மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். அந்த உணவுக்காக தன் உணவையும் கருதாமல் வெயில், மழை என எதையும் பாராமல் கடுமையாக உழைப்பவர்தான் விவசாயி.

மனிதகுலத்திற்காக அல்லும் பகலும் உழைக்கும் விவசாயிகளும் தங்களது வயதான காலத்தில் ஓய்வூதியம் பெற்றுப் பயனடைய வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா (Pradhan mantri kisan mandhan yojana) என்ற மகத்தானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தை தமிழக விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பணியை, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய-மாநில அரசுகளின் இந்த திட்டத்தில் இதுவரை பல லட்சம் விவசாயிகள் இணைந்துள்ளனர்.

Credit: You Tube

தகுதி மற்றும் பலன்கள்

  • 18 முதல் 40 வயதுக்குள் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும்.

  • அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையில் விவசாய நிலம் கொண்டிருக்கும் விவசாயிகள், தங்கள் வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ப்ரிமியமாக ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். வயதிற்கேற்ப ப்ரிமியம் தொகை மாறுபடும்.

  • தொடக்கத்தில் கட்டும் அதே தொகையை தங்கள் 60 வயது வரைத் தொடரலாம்.

  • விவசாயிகள் செலுத்துவதற்கு நிகரான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தும்.

  • 1 மாதம், 5 மாதம், 6 மாதம், 1 வருடம் என அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து Auto debit மூலம் செலுத்தலாம்.

  • 61 வயது முதல் மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கும்.

  • எதிர்பாராதவிதமாக பணம் கட்டியவர் இறக்க நேரிட்டால், அவரது வாரிசுதாரருக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

  • விவசாயிகள் 5 வருடங்களுக்கு பிறகு, இந்த திட்டத்தைத் தொட விரும்பாத பட்சத்தில், செலுத்திய பணத்தை வட்டியுடன் பெறும் வசதியும் உள்ளது.

  • சிறு, குறு, விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும், 40 வயதைக் கடந்துவிட்டது என்றாலும், தனது மனைவி, மகள், மகன் என அவர்களது பெயரிலும் இந்த திட்டத்தில் சேரலாம்.

  • EPO, NPS, அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.

  • திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள இ-பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

  • இந்த திட்டத்தில் இணைந்த விவசாயி ஓய்வூதிய திட்டம் முடியும் முன்பே இறந்து விட்டார் எனில் அவருடைய மனைவி திட்டத்தை தொடரலாம். அவருக்கு விருப்பம் இல்லையெனில் கணவர் கட்டிய தொகையுடன் சிறிது வட்டியும் சேர்த்து மனைவிக்கோ அல்லது அவர்களது பிள்ளைகளுக்கோ போய் சேரும்.

  • கணவனோ, மனைவியோ உயிருடன் இல்லையெனில் அவரது பணம் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப்படும்.

  • ஒரு குடும்பத்தில்  கணவனும், மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

  • செலுத்தும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்கு பின் பாதியில் நிறுத்தி விட்டாலும், வட்டியுடன் திரும்ப பெறலாம்.

Credit:Catch news

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் அட்டை, (பிறந்த தேதி, மாதம், வருடம் இருக்க வேண்டும்)

  • வாரிசுதாரரின் ஆதார் அட்டை (பிறந்த தேதி, மாதம், வருடம் இருக்க வேண்டும்)

  • வங்கிக் கணக்கு புத்தகம் (IFSC Code உள்ள ஏதேனும் வங்கி கணக்குப் புத்தகம்)

ஆகியவற்றை கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

தொகையை மாத தவணை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு முறை செலுத்தலாம்.

அரசின் இந்த திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் இணைந்து 60 வயதிலிருந்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம். 

மேலும் படிக்க...

ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசின் திட்டம் - மானாவாரி விவசாயிகளுக்கு அழைப்பு!

ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழக அரசின் திட்டம் -பெறுவதற்கான வழிமுறைகைள்!

English Summary: What to do to join the Prime Minister's Farmers' Retirement Scheme - Instructions are for you!
Published on: 05 August 2020, 04:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now