Horticulture

Friday, 16 October 2020 05:45 PM , by: Elavarse Sivakumar

Credit : Quora

தருமபுரி மாவட்ட விவசாயிகள் விதை உற்பத்தி செய்ய முன்வருமான மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்ருப்பதாவது:

  • தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், சான்றளிக்கபட்ட உண்மை நிலை விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை தொழில் முனைவோர் மூலம், 61 ஹெக்டேரில், 23 டன் காய்கறி விதைகள் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • இத்திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள், தோட்டக்கலை தொழில் முனைவோர்களுக்கு, வெங்காயம், முருங்கை, காய்கறி, காராமணி, கொத்தவரை, பாகல், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணி உள்ளிட்ட காய்கறி பயிர்களின் விதைகளை உற்பத்தி செய்வதற்கு, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

  • குறைந்தபட்சம், 0.2 ஹெக்டேர் முதல், இரண்டு ஹெக்டர் வரை உறுதி செய்யப்பட்ட நீர்பாசன வசதியுடன் கூடிய நிலம் கொண்ட விவசாயிகள், இந்த விதை உற்பத்தி செய்ய தகுதி பெற்றவர்களாகும்.

  • இத்திட்டம் குறித்த, மேலும் விபரங்களுக்கு, தர்மபுரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அல்லது அந்தந்த தாலுகாவில் உள்ள, தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

  • உழவன் செயலியிலிலும், விதை உற்பத்தி குறித்து பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ரசாயனப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக உயிரி பூச்சிக் கொல்லி!

அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)