மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 October, 2020 8:41 AM IST
Credit : Telangana Today

நெற்பயிரில் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என வேளாண் இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதிகாரி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் மற்றும் நெல்லில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் விவசாயிகளிடம் பேசினார். அப்போது
மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை ஒரு லட்சம் ஹெக்டேரில் நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளன.

வேளாண் துறை மூலம் மெட்ரிக் டன், வேளாண்மை விரிவாக்க மையங்களில் 396 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன

மாவட்டத்தில் சுமார் 3.792 மெட்ரிக் டன் யூரியா இருப்பில் உள்ள நிலையில், தொடர்ந்து உரங்கள் வந்து கொண்டிருக் கின்றன. தற்போது சம்பா, தாளடி பயிர் நிலையை பொறுத்த வரை, நடவு முதல் 50 நாள்கள் வரையிலான வளர்ச்சிப் பருவத்தில் உள்ளன.

இதில், ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்களில் சில இடங் களில் தென்படுகின்றன. ஆனைக்கொம்பன் ஈ தாக்கிய வயல் களில், ஆனைக்கொம்பன் ஈயைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள், ஊன் உண்ணிகள் நிறைந்து காணப்படுகின்றன.

பூச்சிகள் தாக்காது

இதுபோன்ற சூழ்நிலையில் விவசாயிகள் பூச்சி மருந்து அளிப்பதை தவிர்த்து மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும். மேலும் யூரியாவை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்தால், எந்த பூச்சிகளும் நெற்பயிரை தாக்காது. நெற் பயிரில் 10 சதவீதம் அதாவது தூர்களில் 10 தூர் மற்றும் அதற்கு மேல் ஆனைக்கொம்பன் ஈயால் பாதிப்பு அடையும் போது மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

கேரட் உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி-அரசு சார்பில் கேரட் கழுவும் இயந்திரம்!!

FSSAI ஊழியராக விருப்பமா? நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

English Summary: Except for the high use of urea, no pests attack the rice crop- Agricultural Advice!
Published on: 17 October 2020, 08:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now