மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 January, 2021 8:15 AM IST
Credit : InAcres

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீலகிரி தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் கூறுகையில்:-

வேளாண்மை (Agriculture)

நீலகிரி மாவட்டத்தை படிப்படியாக இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க உறுப்பினர்களை கொண்டு மாவட்ட அளவிலான வேளாண்மை உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சோதனை (Testing)

நீலகிரியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து மண், நீர் மற்றும் விளைபொருட்களின் மாதிரிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் சேகரிக்கப்பட்டு, அவற்றில் உள்ள ரசாயன மருந்தின் தன்மை குறித்த பகுப்பாய்வு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

100 பேருக்கு மானியம் (Subsidy)

தொழில்நுட்ப விஞ்ஞானிகள் சமர்ப்பித்த அறிக்கையின் படி, அதிக நஞ்சு உள்ள பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக 2019-2020-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ், 50 மண்புழு உர தொட்டிகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே இயற்கை உரம் தயாரிப்பதால், செயற்கை உரங்களுக்கு செலவிடும் முதலீடு கணிசமாக குறைக்கப்படுகிறது.
தோட்டக்கலை சார்ந்த இயற்கை விவசாயம் மேற்கொள்ள 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

நல்ல விலை  (Good price)

இதற்காக இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைப்பதற்காக டிரைக்கோடெர்மா விரிடி, மண்புழு உரம், பஞ்சகாவ்யா, தசகாவ்யா போன்றவை அரசு பண்ணைகளிலேயே தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளில் எடுத்த முயற்சிகளால் நீலகிரியில் தற்போது 2, 370 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை காய்கறி சாகுபடி தொடங்கப்பட்டு, இதன் மாறுதலுக்கான ஸ்கோப் சான்றிதழை தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழங்கியது. தேயிலை தோட்டங்களில் 2,865 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இயற்கை வேளாண்மை மாவட்டம் (Natural Agriculture District)

நீலகிரியை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்றுவதோடு, இதன் மூலம் விவசாயிகள் நல்ல தரமான பொருட்களை உற்பத்தி செய்து, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.
மேலும் அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு, வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுக்க வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி?

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

English Summary: Rs. 60 lakh subsidy for 100 people to do nature farming!
Published on: 23 January 2021, 08:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now