News

Sunday, 09 April 2023 02:10 PM , by: Poonguzhali R

419 water bodies will be repaired in Tamil Nadu! World Bank Help!

மத்திய நீர்வள ஆணையம் மூலம் உலக வங்கிக்கு நிதிக்கான முன்மொழிவை துறை அனுப்பியுள்ளது. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டமானது, மாநிலம் முழுவதும் 341 குளங்கள், 67 அணைக்கட்டுகள் மற்றும் 11 கால்வாய்கள் ரூ.461 கோடி செலவில் புனரமைக்கப்பட உள்ளது. உலக வங்கி நிதியில் 70 சதவீதத்தை கடனாக வழங்கும். மீதமுள்ள 30 சதவீத செலவுகளை மாநில அரசு ஏற்கும்.

இத்திட்டத்தின் கீழ் பாலாறு, செய்யாறு, காவிரி, பெரியாறு மற்றும் பிற ஆற்றுப்படுகைகளின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் அணைகள் சீரமைக்கப்படும் என நீர்வளத்துறை உயர் அதிகாரி கூறியுள்ளார். விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்த பின், பணிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீர்வளத்துறை மூலம் கட்டம் கட்டமாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் விவசாயத்தை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மற்றொரு அதிகாரி கூறியிருக்கிறார். முதல் கட்டமாக, உலக வங்கியின் ஆதரவுடன் காவிரி மற்றும் செய்யாறு படுகையில் உள்ள சில குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய நீர்வள ஆணையம் மூலம் உலக வங்கிக்கு நிதிக்கான முன்மொழிவைத் துறை அனுப்பியுள்ளது.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், இந்த முயற்சியை வரவேற்று, அதிக தண்ணீரை சேமிக்க உதவும் சிறிய தடுப்பணைகளை கட்டுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

"பாசனத்திற்காக அடையாளம் காணப்பட்ட தொட்டிகள் எளிதாக நீர் பாய்ச்சுவதற்காக மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை தூர்வாரப்படும். காவிரிப் பகுதியில், மேட்டூர் அணையில் இருந்து 7 அடி வரை வண்டல் மணல் அகற்றப்பட வேண்டும், மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் நீர் வழங்குவதை உறுதிசெய்ய பாசனக் கால்வாய்களை சுத்தம் செய்து அதன் முனை வரை அகலப்படுத்த வேண்டும், ”என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

18 ஆயிரம் டன் சந்தை காய்கறிகள் விற்பனை!

ஆத்தூர் வெற்றிலை புவிசார் குறியீடு பெற்றது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)