மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 October, 2020 9:02 PM IST

நெல் சாகுடிபயை ஊக்குவிப்பதற்காக கேரள அரசு அறிவித்த ராயல்டி வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை 60 ஆயிரம் நில உரிமையாளர்கள் ராயல்டிக்கு (Royalty) விண்ணப்பித்துள்ளனர்.

நெல் சாகுபடியாளர்களுக்கு உதவும் இத்திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். விவசாயிகளுக்கு ராயல்டியாக ஆண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

ரூ.40 கோடிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டிலேயே நெல் வயல் உரிமையாளர்களுக்கு ராயல்டி செலுத்தும் முதல் மாநிலம் கேரளமாகும். வயல்கள் அப்படியே வைத்து, பாதுகாத்து நெல் சாகுபடிக்கு தயார் செய்ய வேண்டும்.

நெல் வயலின் அடிப்படை பண்புகளை மாற்றாத பருப்புவகைகள், காய்கறிகள், என் மற்றும் நிலக்கடலை போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிடுவோருக்கும் ராயல்டி கிடைக்கும்.
தற்போது நெல் விதைகள் கிருஷி பவன் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

உழவு கட்டணமாக ஒரு ஹெக்டேருக்கு 17.500மும், உற்பத்தி போனஸாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1000மும் மற்றும் நிலையான மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.1500மும் இவற்றோடு மானிய விலையில் உரமும் வழங்கப்படுகின்றன. தமிழக அரசும் இந்த திட்டத்தைக் கொண்டுவந்தால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவர்.

மேலும் படிக்க...

விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!

மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!

குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!

English Summary: 60,000 landowners apply for royalty for paddy cultivation from November 1!
Published on: 20 October 2020, 09:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now