மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 November, 2020 12:33 PM IST

எவ்வளவு உழைத்தாலும், சம்பாதிக்கும் காசு கையில் நிற்கவில்லையே என்று புலம்புபவரா நீங்கள்? இதற்கு ஒரே தீர்வு சொந்தத்தொழில்தான்.

அதுவும் உணவு, வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவை சார்ந்த துறைகளில், குறைந்த முதலீட்டில் சிறு, குறுத் தொழில் தொடங்கினால், எப்போது மார்க்கெட் இருக்கும். அப்படி தொழில் தொடங்க விருப்பமா? இதற்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 75 முதல் 80% மானியம் கொடுக்கிறது அரசு.

தொழில்களும், மானியமும்

அப்பளம் தயாரிப்பு (Papad Manufacturing Unit)

காலம் காலமாக விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களில், அப்பளம் மிகவும் முக்கியமானது. சரியான பக்குவத்துடன், உயர் தரத்துடன் தயாரித்தால், விற்பனை ஜோராக நடக்கும். இதற்கு முதலீடாக ரூ. 2 லட்சம் செலவிட வேண்டியிருக்கும். முத்ரா திட்டத்தின் கீழ்
ரூ. 8 லட்சம் வரை வங்கிக்கடன் கிடைக்கும். இந்த தொழிலுக்கு அரசிடம் இருந்து ரூ. 1.91 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.

அரிசிப்பொடி வியாபாரம்

அரிசி மற்றும் சமையலுக்குத் தேவையான மசாலாப் பொடி வியாபாரத்திற்கு தற்போது மிகுந்த தேவை உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு இந்த வியாபாரத்தைக் கையில் எடுக்க, ரூ.1.66 லட்சம் ரூபாய் முதலீடாகத் தேவைப்படும்.
முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை வங்கிக்கடன் பெறலாம்.

Credit : Wallpaperflare

உட்டன் ஃபர்னிச்சர் வியாபாரம் (Wooden Furniture)

வீடு என்றாலே அதில் மரத்தினால் ஆன மேஜை, நாற்காலி, கட்டில், சோஃபா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதையே மக்கள் மிகப்பெரிய கவுரவமாகக் கருதுவர்.
எனவே இந்த தொழிலுக்கு எப்போதுமே மவுசு அதிகம். சிறிய அளவில் தொடங்கும்போது, ஆரம்ப கால முதலீடாக ரூ. 1.85 லட்சம் தேவைப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் இந்தத் தொழிலுக்கு ரூ. 7.48 லட்சம் வங்கிக்கடன் அளிக்கிறது அரசு.லாபம் ரூ. 60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரைப் பெற முடியும்.

கம்ப்யூட்டர் அசம்ப்ளிங் வியாபாரம் ( Computer Assembling Business)

கம்ப்யூட்டர் தொடர்பான வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் அசத்தலான லாபத்தை அள்ளித்தரும். ஆரம்பகட்ட முதலீடாக ரூ.2.70 லட்சம் செலுத்த வேண்டும். வங்கிக்கடன் ரூ.6.30 லட்சம் வரைக் கிடைக்கும்.

முத்ரா கடன்  எப்படிப் பெறுவது? (How to get Mudra loan)

இந்த தொழில்களைத் தொடங்கி லாபம் ஈட்ட நினைப்பவர்கள், ஆன்லைன் மூலமே முத்ரா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு வாங்கும்போது, மற்ற வங்கிக்கடனைக் காட்டிலும், முத்ரா வங்கிக்கடனில் 2 சதவீதம் வரை வட்டி குறைவாக செலுத்த வேண்டியது வரும்.

மேலும் படிக்க...

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

ஈஷாவின் சிறப்பு சேவை- சிறைக் கைதிகளிடத்தில் பரிவு!

மஞ்சளில் இலைப்புள்ளி நோய் - பாதுகாக்க என்ன செய்வது?

English Summary: 80% Government Subsidy Fantastic Business- Full Details Inside!
Published on: 22 November 2020, 12:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now