News

Friday, 25 September 2020 06:43 AM , by: Elavarse Sivakumar

Credit: You tube

திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம், 100 சதவீத மானியத்தில், அதாவத விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகளை ஊராட்சிகளைச் சேர்ந்த 5,600 ஏழைப்பெண்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியத்திற்கு 5600 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் கிராமப்புற ஏழைப் பெண்களாகவும், கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

  •  பயன்பெற விரும்புவோர்,  முந்தைய நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளாக இருத்தல் கூடாது.

  • விதவைகள், ஆதரவற்றோர், மற்றும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர், கட்டாயமாக ஆதிதிராவிடர்,பழங்குடியினர் இனத்தை சோர்ந்தவர்களாகத் தேர்வு செய்யப்படுவர்.

  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • இத்தகுதிகளை கொண்ட பயனாளிகள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தின், கால்நடை உதவி மருத்துவரை அணுகி 28.09.2020-க்குள் விண்ணப்பிக்கலாம்.

  • இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)