1. கால்நடை

100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
100 per cent subsidy on acil breeding - Opportunity for women

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, அசில் ரக கோழி வளர்ப்புக்கு 100 சதவீத மானியத்தில் குஞ்சுகள் வீதம் வழங்கப்பட உள்ளன.

கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 400 பேர் வீதம் 5,600 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 அசில் ரக கோழிக் குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

பெண்களுக்கு வாய்ப்பு (Call for ladies)

பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ள இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தில் பதிவு பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

விதிகள்  (Norms)

  • அந்தந்த கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

  • ஏற்கனவே, விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு அல்லது செம்மறியாடு மற்றும் கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள், இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.

  • விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • 30 சதவீதம்  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

  • தகுதியான ஏழைப் பெண் பயனாளிகள் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் இம்மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

தகவல்

முருகன்

இணை இயக்குநர்

திண்டுக்கல் மண்டலம்

கிராமத்தைச் சேர்ந்தவராக நீங்கள்?-குறைந்த முதலீட்டில் வியாபாரம் செய்ய சூப்பர் டிப்ஸ்!

பட்டுப் புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் - தேனி விவசாயிகளுக்கு வாய்ப்பு

English Summary: 100 per cent subsidy on acil breeding - Opportunity for women Published on: 17 September 2020, 12:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.