News

Friday, 09 October 2020 10:11 AM , by: Elavarse Sivakumar

கால்நடை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் 12ம் தேதி திருப்பூர் மாவட்டம் அலகுமலையில், மாபெரும் கால்நடை வார சந்தை நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த கால்நடை வார சந்தையில், நாட்டு மாடு, ஜெர்சி இன மாடுகள், எருதுகள், செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் கோழிகளுக்கு தனித்தனி விசாலமான இடத்தில் கால்நடை விற்பனை நடைபெறும். இந்த 
கால்நடை சந்தை நடைபெற, அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து இச்சந்தை வாரந்தோறும் நடைபெற உள்ளதால், அனைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் கலந்துகொண்டு கால்நடைகளை வாங்கியும், விற்பனை செய்துயும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு

  • திருப்பூரில் இருந்து வந்தால், பெருந்தொழுவு வழியாக 12 கிலோ மீட்டர் தொலைவில் அலகுமலையை அடையலாம்.

  • காங்கயம்-கோவை சாலையில் நாச்சிபாளையம் பிரிவில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்தால், அலகுமலையை அடையலாம்.

விபரங்களை அறிய 98430 62867, 93442 01234 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

PMMSY : கால்நடை வளர்ப்போருக்காக e-Gopala App- அனைத்து தகவலும் உங்கள் கையில்!!

100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)