நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 February, 2021 5:22 PM IST

கடந்த ஆண்டில் பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழகத்திற்கு 286.91 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், புயல், வெட்டுக்கிளி தாக்குதலால் என பல்வேறு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மத்தியபிரதேசம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியாக ரூ.3113.15 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி

நிவர் மற்றும் புரவி புயல்களால் அடுத்தடுத்து பாதிப்படைந்த தமிழகத்துக்கு 286.91 கோடி ரூபாயும், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு 9.91 கோடி ரூபாயும் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

பெரு வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்த பீகாருக்கு ரூ.1,255.27 கோடியும், தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கை எதிர்கொண்ட ஆந்திரபிரதேச மாநிலத்துக்கு 280.78 கோடி ரூபாயும் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வெட்டுகிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்துக்கு 1280.18 கோடி ரூபாய் நிதி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020-21 நிதியாண்டில் 19,036.43 கோடி ரூபாய் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 4,409.71 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

தமிழக அரசின் 12000 கோடி வேளாண் கடன் தள்ளுபடி!- வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? விவசாயிகளே உங்கள் கடன்கள் தள்ளுபடியாகுமா?

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும்! - அனுராக்தாகூர்

‘இனிப்பு புரட்சி’-யில் இலக்கை எட்டவிருக்கும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்!!

வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!

English Summary: Centre approves Rs 3,113 crore for 5 states as disaster relief, Tamilnadu to get 286.91 crore
Published on: 13 February 2021, 05:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now