News

Wednesday, 21 September 2022 07:55 AM , by: R. Balakrishnan

National Pension Scheme

தேசிய பென்சன் திட்டம் (NPS) முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்டது. பிற்காலத்தில் தனியார் ஊழியர்களும் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. தேசிய பென்சன் திட்டத்தை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகிறது.

தேசிய பென்சன் திட்டம் (National Pension Scheme)

தேசிய பென்சன் திட்டத்தில் ஒரு நபர் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், அவர் பணிஓய்வு பெறும்போது, தனது பென்சன் நிதியில் உள்ள பணத்தில் 60% வரை எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகையில் ஆண்டுத்தொகை வாங்கி பென்சன் பெறலாம்.

இந்நிலையில், இந்த பென்சன் நிதியை எடுப்பதற்கான விதிமுறைகளை PFRDA திருத்தியுள்ளது. அதாவது, பென்சன் நிதியை எடுப்பதற்கான கால வரம்பை குறைத்துள்ளது PFRDA. இதுவரையில், பென்சன் நிதியில் உள்ள பணத்தை எடுப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், அந்த கோரிக்கை 4 நாட்களில் செயல்படுத்தப்படும்.

இந்நிலையில், இந்த விதிமுறையை PFRDA மாற்றியுள்ளது. புதிய விதிமுறைப்படி, இனி தேசிய பென்சன் திட்ட கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், அந்த கோரிக்கை 2 நாட்களில் செயல்படுத்தப்படும் என PFRDA தெரிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தேசிய பென்சன் திட்ட பயனாளிகள் பயன்பெறுவார்கள். விரைவாக பணம் கிடைப்பது மட்டுமல்லாமல் நேர விரயத்தை தவிர்க்க முடியும்.

மேலும் படிக்க

ரேசன் கார்டில் மோசடி: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

ATM கார்டுக்கு வாடகையா? நமக்கே தெரியாத கட்டண வசூல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)